03
Mar
வீரியம், சுக்கிலம், தாது, விந்து, செமன் என்று பலவாறாக அழைக்கப்படும் உயிர் சக்தி தான் தாது சக்தி.
விந்து பலம் தான் மனோ பலம், மனோ பலம் தான் ஆன்ம பலம் என்பது நம் நாட்டில் சித்தர் வாக்கு.
ஒரு மனிதன் 13 வயது முதல் திருமணம் ஆகும் வரை அவனது மன ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கத்தை பொறுத்தே ஆணின் ஆண்மை பற்றி மதிப்பிட முடியும். இளம் வயதில் ஒரு ஆண் மிக கவனமாக தனது உயிர் சக்தியின் (விந்து) மகிமையை உணர்ந்து மனதை செம்மை படுத்தி வாழவேண்டும். அன்றைய அரசர் காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை இளமைப் பருவத்தில் உடல் இச்சைக்காக பலரும் தவறான விஷயங்களில் ஈடுபட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இன்று சாப்பிடும் உணவு ஏழாவது நாளில் தான் நம் உடலில் உயிர் சக்தியாக மாற்றம் அடைகிறது.
தாடியஸ்மன் என்பவர் 100 மி.லி. அளவுள்ள விந்தில் இடம் பெற்றுள்ள ரசாயனப் பொருட்களின் அளவை கணக்கிட்டு ஆராய்ச்சி செய்து கூறியுள்ளார்.
100 மி.லி. விந்தில் உள்ள தாதுப்பொருட்கள்
அமோனியா – 2 மி.கி.
குளோரைட் – 155 மி.கி.
விட்டமின் ‘சி’ – 128 மி.கி.
கரியமிலவாயு – 54 மி.கி.
சாம்பல் – 99 மி.கி.
ரத்த நிணநீர் – 80 மி.கி.
கால்சியம் – 25 மி.கி.
சிட்ரிக் ஆசிட் – 376 மி.கி.
பரக்டோஸ் – 54.90 மி.கி.
கிரியேடின் – 20 மி.கி.
குளுட்டாதியோன் – 54.90 மி.கி.
கிளிசரில் ஃபாரில்கோலின் – 54.90 மி.கி.
பி. காம்ப்ளெக்ஸ் – 50.59 மி.கி.
லாக்டிக் ஆஸிட் – 30 மி.கி.
மக்னீஷியம் – 14 மி.கி.
நைட்ரஜன் டோட்டல் – 913 மி.கி.
பாஸ்பரஸ் – 57 மி.கி.
இட் ஆர்கானிக் – 11 மி.கி.
டோட்டல் லிபிட் – 113 மி.கி.
பாஸ்பரின் கோலிக் – 250 மி.கி.
ப்ரூவிக் ஆசிட் – 29 மி.கி.
சோடியம் – 281 மி.கி.
சார்பிடால் – 10 மி.கி.
விட்டமின் B12 – 300 மி.கி.
கந்தகம் – 3%
யூரியா – 6 மி.கி.
யூரிக் ஆசிட் – 14 மி.கி.
செம்பு சத்து – 0.023 மி.கி.
எத்தனை ஆண்களுக்கு மேலே குறிப்பிட்ட தகவல் தெரியும்? ஒரு ஆண் 13வயது முதல் திருமணம் ஆகும் வரை அவன் தனது மன ஒழுக்கத்தால் தனது உயிர் சக்தியைத் தன் உடலில் தக்க வைத்தால் மட்டுமே உண்மையான ஆண்மை உடலில் இருக்கும்.
இந்த பருவத்தில் பெற்றோர் தனது பிள்ளைகளை சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். அவர்களுடன் ஒரு நண்பன் போல பழக வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு 13 வயதாகும் போது நமது உடலில் உள்ள உயிர் சக்தியின் மகிமையை எடுத்துரைத்து, திசைமாறி ஒழுங்கீனமான செயலுக்கு சென்றால் திருமண வாழ்வில் புத்திர பாக்கியம் கிடைக்காது, ஆண்மை கோளாறினால் கணவன் – மனைவி உறவு பாதிக்கும், உடலில் ஆரோக்கியம் கெட்டு பல வியாதிகள் வரும் என்பதை பக்குவமாக அவர்களுக்கு எடுத்துரைத்தால் நிச்சயம் ஆண் பிள்ளைகள் வழி தவறி நடக்க மாட்டார்கள்.
இன்று திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை இல்லை என்றால், உடனே உறவினர்கள் பெண்ணை மட்டும் மருத்துவ பரிசோதனை செய்யச் சொல்வார்கள். இது தவறு. தம்பதியர் இருவருக்கும் சோதனை செய்ய வேண்டும். சராசரியான சர்வேயில் பெண்களை விட ஆண்களுக்கு தான் மலட்டுத் தன்மை அதிகமாக உள்ளது.
ஆண்மை குறைவின் வகைகள்…
பிரைமரி இம்பொடன்ஸ் அல்லது பிரதான ஆண்மை குறைவு என்றும், சார்புநிலை ஆண்மை குறைவு அல்லது செகண்டரி இம்பொடன்ஸ் என்று இரண்டு வகை இருக்கிறது.
பிரதான ஆண்மை குறைவு என்பது உடல் சார்ந்த நோய்களால், விபத்து, மூளை, தண்டுவடம் போன்றவற்றில் ஏற்படும் காயங்களால் உண்டாவது.
சார்புநிலை ஆண்மை குறைவு என்பது பழக்க வழக்கங்கள், மன இறுக்கம், டென்ஷன் போன்றவற்றாலும் மது, புகை போன்ற போதை வஸ்துக்களை அடிக்கடி பயன்படுத்துவதாலும் ஏற்படுகிறது. பொதுவாக சார்பு நிலை ஆண்மைக்குறைவு பிரச்சனை தான் நிறைய ஆண்களுக்கு இருக்கிறது.
ஆண்மை குறைவு ஏற்பட மற்ற காரணங்கள்
உடல் சார்ந்தவை
நரம்பு சார்ந்த பிரச்சனைகள், டெஸ்டோஸ்டிரான் அளவு குறைதல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சத்து இருத்தல், உடல் பருமன்.
மனம் சார்ந்தவை
தாழ்வு மனப்பான்மை, கோபம், கவலை, மன இறுக்கம், மனச் சோர்வு, பயம், வாழ்வில் சலிப்பு, ஒழுங்கீனமாக வாழ்தல், எப்போதும் மனதில் காம உணர்ச்சியுடன் வாழ்தல். நம்முடைய எண்ணங்களுக்கு ஏற்ப நமது உடம்பில் உயிர் சக்தியில் உள்ள ஹார்மோன்கள் சுரப்பதில் மாறுபாடு ஏற்படும். தொடர்ந்து காம சிந்தனை இருந்தால் கணவன்-மனைவி சேரும்போது மிக விரைவிலேயே உயிர்சக்தி வெளியேறிவிடும். அதன் பின் சலிப்பும் மனச்சோர்வும் தான் இருக்கும்.
மாணவப் பருவத்தில் ஆண்கள் தவறாக சுய இன்பம் முறையில் தினமும் தனது உயிர் சக்தியை விரயம் செய்வார்கள். மனதில் எப்பொழுதும் காம எண்ணம் இருப்பதால் இரவில் தூங்கும் போது தானாகவே விந்து வெளிப்படும். தவிர, சிலருக்கு உடல் சூடு அதிகமாகி சிறுநீர் கழிக்கும் போது விந்து வெளியேறும். இதனால் உடலும், மனமும் சோர்வாக காணப்படுவார்கள். மன இறுக்கமும் அதிகமாகும். எனக்கு இந்த நோய் உள்ளது என்று தனது தாய், தந்தையிடம் சொல்ல வெட்கப்பட்டு பயந்து வாழ்வார்கள். இந்த நிலையில் திருமண ஏற்பாடு செய்தால், இன்னும் மன இறுக்கம் கவலை அதிகமாகி, திருமணத்திற்குப் பின்னும் ஆண்மை குறைவால் அவதிப்படுவார்கள்.
இதற்கு என்னென்ன யோகாசனங்களை செய்ய வேண்டும், என்னென்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி அடுத்த இதழில்…
What are the mudras to cure impotent