இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் அர்த்த பத்மாசனம், தியான முத்திரை
அர்த்த பத்மாசனம்
இந்த ஆசனம் வலது கால் இடது கால் தொடையில் ஒரு அழுத்தம் கொடுப்பதால் வலது இடது பக்க நுரையீரல் நன்றாக இயங்கும். இரத்த ஓட்டம் சீராகும்.
மன அழுத்தம்
மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கின்றது. மன அமைதியினால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
தியான முத்திரை
தியான முத்திரை மனதில் உள்ள பதட்டம், டென்ஷன், கோபம் நீக்க வல்லது. மன அமைதியை தரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
ஆனந்தமய கோசம் ஆற்றல்
நமது ஐந்தாவது உடலில் உள்ள ஆனந்தமய கோசத்திலிருந்து அற்புத ஆற்றல் பெற்று நமது அன்னமய கோசத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கவல்லது தியான முத்திரை. மனோமய, பிராணமய கோசத்தின் குறைபாடுகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். இரத்த அழுத்தம் நீக்க வல்லது தியான முத்திரை.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji