22
Nov
ஏக உசட்டாசனம் செய்யுங்க ஹார்ட் அட்டாக் வராது
இன்று நாட்டில் பலர் தங்கள் உடலில் பல விதமான நோய்களை வைத்து அமோக நோயாளியாகத் தான் வாழ்கிறார்கள். நோயில்லாமல் ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் யாரிடம் உள்ளதோ அவர் தான் உண்மையில் அமோகமாக வாழ்கிறார் என்று அர்த்தம்!
இன்று மனிதர்களுக்கு பலவகை நோய்கள் வருகின்றன… அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்கள் வித விதமான மாத்திரைகள், ஊசி போட்டு வாழ்கிறார்கள். ஆனால் நோய் என்பது என்ன? அது எதனால் வருகிறது? அதைத் தடுப்பதற்கு என்ன வழி? என்பதை பலரும் ஆராய்வதில்லை!
பசித்துப் புசித்தாலே உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
உண்கின்ற உணவும் தரமான சத்தான காய்கறி, பழங்கள், கீரைவகைகளாக இருக்க வேண்டும். எண்ணெய் பண்டங்கள், மைதா உணவு, தெருக்களில் விற்கும் வடை, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட தரமற்ற உணவுகளை தவிர்க்கவும், உடலுக்கு சரியான அளவு உழைப்பு, இரவு 10 மணி முதல் 4 மணி வரை நல்ல உறக்கம் ஓருவருக்கு அவசியம். இவை இருந்தாலே உடலும் மனமும் நலமாகும்.
நம் மனதுக்கும் நம் உடலில் உள்ள நீருக்கும் (ரத்தம்) நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு கோயிலில் தீர்த்தம் என்று வாங்கி குடிக்கிறோம். அது என்ன தண்ணீர் தான். அது இறைவனின் மூலஸ்தானத்தில் வைத்து நல்ல மந்திரங்கள் ஓதும்போது அந்த மந்திரத்தின் பாசிட்டிவ் எனர்ஜியை தண்ணீரானது கிரகித்துக் கொள்கிறது. அதனால் அது புனித தீர்த்தமாக நோய் தீர்க்கும் அருமருந்தாக மாறி விடுகிறது!
மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மனிதன் கோபப் பட்டால், பொறாமைப் பட்டால், கவலைப் பட்டாலோ அல்லது வேறு தீய எண்ணங்கள் ஏதேனும் ஏற்படும் பொழுது, உடலில் உள்ள நீரானது கெட்டு விடுகிறது.
அதனால் தான் உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுவே நோயாக பரிணமிக்கிறது. மனிதன் தனது மனதில் நல்ல எண்ணங்களை மட்டும் வளர்த்தால் இந்த உடலில் உள்ள நீரானது புனிதமாகும். சுத்தமாக இருக்கும். நோய் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
சந்தேகமும் நம்பிக்கையின்மையும் மிகப்பெரிய நோய். ஒருவருக்கு தீடிரென்று மயக்கம் வந்தது. ஒரு நிமிடம் கழித்து எழுந்து விட்டார். உடனே அவர் மனதில் நமக்கு சுகர் அதிகமாகி விட்டதோ? அல்லது ரத்த அழுத்தம் வந்திருக்குமோ? இதய வலியாக இருக்குமோ? என்று பலவித சந்தேகங்கள் எழும். இது தான் நோயாக உருவெடுக்கிறது. இந்த சந்தேகம் பயம் இரண்டும் தான் ஆங்கில மருத்துவருக்கு மூலதனம். உடனே பலவகை டெஸ்ட், ஸ்கேன், பின் ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற நரகத்துக்குள் அவர் உங்களை தள்ளிவிடுவார்.
இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமா? மனதையும் உடலையும் செம்மைப் படுத்தும் யோகக் கலையை தினமும் காலை / மாலை 10 நிமிடம் பயிற்சி செய்யுங்கள். உடலையும் மனமும் செம்மையாக இயங்கும். மனதில் ஏற்பட்ட தீய எண்ணத்தினால், உடலில் ரத்தத்தில் ஏற்பட்ட அசுத்த உணர்வுகள் நீங்கும். மனமும் புனிதமாகும். உங்கள் உடலில் உள்ள நீர் புனிதமாக மாற அதன் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாக மாற ஏக உசட்டாசனம் செய்யுங்கள். அமோகமாக வாழுங்கள்!
ஏக உசட்டாசனம் செய்முறை:
- முழங்கால்களை இரண்டடி அளவுக்கு அகற்றி வைத்து, முட்டிக்கால் போடவும்.
- இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும்.
- வலது கையை மெதுவாக பின்பக்கம் வளைத்து, வலது கணுக்காலை பிடிக்கவும்.
- இப்போது தலையை பின்னால் சாய்த்து, இடது கை விரல்களை பார்க்கவும்.
- மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக வெளியே விடவும்.
- இப்படியே ஒரு 10 வினாடி இருக்கவும்.
- பின்னர் மெதுவாக கையை எடுத்து சாதாரண நிலைக்கு வரவும்.
- இதே போல காலை மாற்றி இரண்டு முறை செய்யவும்.
இந்த ஆசனத்தின் பலன்கள்:
இதயம் சிறப்பாக இயங்கும்
ராஜ உறுப்பான இதயம் மிக சிறப்பாக இயங்கும். இதய பலவீனம், இதய வலி, இதய வால்வில் ஓட்டை, ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பிரச்சனைகள் வராது.
ரத்த அழுத்தம் வராது
பீ.பி. பிரச்சனை வராது. உடலில் மிகச் சிறப்பான முறையில் ரத்த ஓட்டம் நடைபெறும்.
முதுகு வலி நீங்கும்
முதுகு வலி சரியாகும். முதுகெலும்பு பலப்படும். முதுகுக்கு நன்கு வளையும் தன்மை கிடைக்கும்.
மார்பகம் வளர்ச்சியடையும்
பெண்கள் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அவர்கள் இந்த ஆசனம் தொடர்ந்து செய்தால் மார்பகம் நன்றாக வளர்ச்சியடையும். ஆண்களுக்கு மார்பகங்கள் விரிவடைந்து நல்ல அழகான உடல் தோற்றம் கிடைக்கும்.
தோள்பட்டை வலி நீங்கும்
தோள்பட்டை வலி நீங்குவதோடு தோள்பட்டை நன்றாக உறுதி பெறும்.
கழுத்து வலி சரியாகும்
கழுத்து வலி நீங்கும். மன அழுத்தமும் டென்ஷனும் படிப்படியாக குறையும்.
மூட்டுவலி வரவே வராது
மூட்டுகள் பலம்பெறும். மூட்டுவலி நீங்கும். எதிர்காலத்தில் மூட்டுவலி வரவே வராது.
சுறுசுறுப்பும் இளமையும்
எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கலாம். என்றும் இளமையுடன் வாழலாம்.
கண்பார்வை சிறப்பாகும்
கிட்டப்பார்வை / தூரப்பார்வை பிரச்சைனைகள் விரைவில் சரியாகும். கண்கள் மிக சிறப்பாக இயங்கும்.
எதிர்மறை எண்ணங்கள் மறையும்
மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் பிறக்கும். தேவையற்ற சந்தேகங்களும் தீய எண்ணங்களும் நீங்கும். நல்ல எண்ணங்கள் வளரும். இந்த ஆசனமானது சாதுவான உணர்வலைகளை பெருக்கும். அதாவது உடலிலும் மனதிலும் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் வளர துணை புரியும்.
இவர்கள் கவனிக்கவும்!
அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய பலவீனம், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் யோகா நிபுணரின் நேரடி பார்வையில், அவரின் ஆலோசனைப்படி இந்த ஆசனத்தை பயிலவும்.
கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள்:
இந்த ஆசனத்தை தினமும் செய்து வாருங்கள்.
- தினசரி உணவில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள்.
- மங்குஸ்தான் பழத்தை மாதம் இருமுறை சாப்பிடுங்கள்.
- சீத்தா, கொய்யா, செவ்வாழை உள்ளிட்ட பழ வகைகளையும் எலுமிச்சைச் சாற்றையும் வாரம் இருமுறை சாப்பிடுங்கள்.
- தக்காளி பழத்தை பச்சையாகவே தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.
- வெள்ளரிப் பழமும் சாப்பிடுங்கள்.