இன்று நாட்டில் நிறையப் பேருக்கு குடலிறக்கம் என்ற நோய் உள்ளது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வருகிறது. திடீரென்று வயிற்றுவலி என்றால், உடனே ஆஸ்பத்திரிக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர். அதன்பின் பலவித பிரச்சனைகள் உடலில் வருகிறது.
குடலிறக்கம் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலைக்குச் சென்று யோசித்துக் கொண்டிருப்பவர்களும் நம்பிக்கையுடன் நிரலம்ப நவாசனம் செய்யலாம். இந்த ஆசனத்தை காலை / மாலை என இரண்டு வேளையும் தலா மூன்று தடவை பயிற்சி செய்தால், குடலிறக்கம் சரியாவது உறுதி!
குடலிறக்கம் பிரச்சனை இல்லாதவர்கள் இந்த ஆசனத்தை தினமும் ஒருமுறை செய்து வந்தால், எதிர்காலத்தில் அவர்களுக்கு குடலிறக்கமே வராது!
நிரலம்ப நவாசனம் செய்முறை:
- விரிப்பில் நேராக படுக்கவும்.
- இரு கைகளையும் தலைக்குப் பின்னால் நேராக வைக்கவும்.
- இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே கால்களையும், கைகளையும் உயர்த்தவும்.
- இரு கைகளையும் கும்பிடும் நிலையில் இணைத்து, கால்களை நோக்கி கைகளை நீட்டவும்.
- இதே நிலையில் மூச்சை அடக்கியவாறு 10 விநாடி இருக்கவும்.
- பின்னர் மெதுவாக மூச்சை வெளியே விட்டு, கால்களையும் கைகளையும் கீழே இறக்கவும்.
- இதேபோல் மூன்று முறை செய்யவும்.
இந்த ஆசனத்தின் இதர பலன்கள்…
சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்
சிறுநீரகம், சிறுநீரகப்பை மிகச் சிறப்பாக இயங்கும். அவற்றில் உள்ள குறைபாடுகள் நீங்கும். சிறுநீரகப்பையில் கற்கள் தங்காது. இருந்தாலும் கரைந்து விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
மலச்சிக்கல் நீங்கும்
மலச்சிக்கல் நீங்கும். தவிர, குடல் சுத்தமாகும். மலக்குடலில் கழிவுகளும் தங்காது.
குடல் சுத்தமாகும்
சிறுகுடலும், பெருங்குடலும் அமுக்கப்படுவதால் குடலில் கழிவுகள் தங்காது. குடல் இயக்கம் நன்றாக இருக்கும். குடலிறக்கமும் வராது.
இடுப்பு தசைகள் குறையும்
அதிகமான இடுப்பு தசைகள் விரைவில் குறையும். நல்ல அழகிய தோற்றத்துடன் திகழலாம்.
இதயம் பாதுகாப்பாகும்
இதயம் பாதுகாக்கப்படும். ‘தைமஸ்’ சுரப்பி நன்றாக இயங்கும். நுரையீரலில் அசுத்தக் காற்று தங்காது.
முதுகுவலி வராது
முதுகெலும்பு திடமாக இயங்கும். முதுகுவலி நீங்கும். குறிப்பாக, கழுத்து முதுகுவலி நன்கு குணமாகும். சீரான ரத்த ஓட்டம் முதுகெலும்பிற்கு கிடைக்கும்.
தசைப்பிடிப்பு சரியாகும்
முதுகு, கழுத்து மற்றும் தசைப்பகுதிகளில் உள்ள இறுக்கம் நீங்கும். அந்தப் பகுதிகளில் வரும் வலியும் சரியாகும்.
வாயு பிரச்சனை சரியாகும்
வயிற்றில் அபான வாயு சரியாக வெளியேறிவிடும். வாயு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். அஜீரணம் நீங்கும்.
பெண்கள் பிரச்சனை தீரும்
கர்ப்பப்பை உறுதியாகும். சுகப்பிரசவம் நிகழும். நீர்க்கட்டிகள் கரையும்.
இடுப்பு வலி நீங்கும்
பெண்களுக்கு வரும் இடுப்புவலி நீங்கும். குழந்தைப் பிறந்தப் பின்பு இடுப்புவலி குறையும்.
மண்ணீரல் சக்தி பெறும்
மண்ணீரல் சிறப்பான சக்தி பெற்று இயங்கும்.
ஆசனத்துடனான உணவு முறை…..
- பசித்தால் மட்டும் சாப்பிடவும்.
- சாப்பிடும்போது உணவை நன்றாக மென்று கூழாக்கிச் சாப்பிடுங்கள்.
- அரைவயிறு சாப்பாடு / கால் வயிறு தண்ணீர் / கால் வயிறு காற்று இதுவே சரியான உணவுமுறை.
- அதிக காரம் நிறைந்த மாமிச உணவைத் தவிர்க்கவும்.
- மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
கீரை அதிகம் தேவை
மணத்தக்காளி, பசலைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரையை உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
என்ன பழங்கள் எடுத்துக்கொள்வது?
- மாதுளம், கொய்யா, கருப்பு திராட்சை, வாழைப்பழம்.
- மாதம் ஒரு நாள் மூன்று வேளையும் ஏதாவது ஒரு பழம் மட்டும் சாப்பிடவும்.
காய்கறிகள் என்னென்ன சேர்க்கலாம்?
முட்டைக்கோஸ், தக்காளி, பாகற்காய், வாழைப்பூ, கேரட், பீட்ரூட்.