குண்டலினி யோகமும் அஷ்டாங்க யோகமும்
நம் வாழ்வில் ஆன்மிகம் – 03
குண்டலினி யோகம் – கால அளவு
குண்டலினி யோகம் ஒரு வாரத்தில், ஒரு மந்திரத்தில் பயிலும் கலை அல்ல. இதனை அறிய முறையான குரு தேவை. அந்த குரு தன்னை உணர்ந்தவராக இருக்க வேண்டும். மனம், உடல், பஞ்சபூத இயக்கம் பற்றிய முழுமையான அறிவு வேண்டும். அதனை குருவே வழங்குவார். எனவே தக்க குரு அவசியம். கால அளவை குருவிடம் விட்டு விடுங்கள்.
அஷ்டாங்க யோகம்
இயமம், நியமம் – ஒழுக்கக் கோட்பாடு, மன ரீதியாக / இந்திரியங்களை எப்படி பக்குவப்படுத்துவது. உடல் மன ஒழுக்கம் குரு மூலமாக பயிலவும்.
ஆசனம் – உடலை ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நிறுத்துதல்
பிராணாயாமம் – மூச்சை சரி செய்தல்
பிரத்தியாகாரம் – மனதை பிறப்பொருளிலிருந்து பிரித்தல்
தாரணை – மனதை ஒரே பொருளில் குவித்தல்
தியானம் – ஒரே சிந்தனை
சமாதி – மனம் கரைந்த மௌன நிலை
இந்த அஷ்டாங்க யோகம் கை கூடினால் உடலில் குண்டலினி சரியாக இயங்கும். அஷ்டாங்க யோகத்தை தக்க குருவின் மூலம் பயிலுங்கள்.
குண்டலினிக்காக தியானமல்ல
தன்னை உணர்வதற்கே தியானம். தன்னை உணர்ந்து ஒழுக்க வாழ்வு வாழ்ந்தால் குண்டலினி தானாக உயரும். எண்ணம் சுத்தமானால் எல்லாம் சுத்தமாகும், குண்டலினி எழுந்தவர் பக்கத்தில் நின்றால் நமக்கு மகிழ்ச்சிருக்கும், ஆனந்தமிருக்கும். அவர் அருகில் இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். குரு உங்களை நாடி வருவார். உண்மையான தேடலுடன் இருங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji