தியானமும் நிகழ்கால வாழ்வும்
நம் வாழ்வில் ஆன்மிகம் – 04
நிகழ்கால வாழ்வு
நாம் பார்க்கின்ற மனிதர்களில் பெரும்பாலும் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. இப்போது இந்த சனம் நமது மூக்கின் வழியாக மூச்சு உள்ளே செல்வது, வெளியே வருவது இதுவே நிகழ்காலம். இதில் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதுவே தியானமாகும்.
எதிர்காலம் நம்பிக்கையிலும், கடந்த காலத்தை மறந்தும் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
தியானம்
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக வெளியிடுங்கள். ஐந்து நிமிடங்கள் செய்துவிட்டு மூச்சில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும் பொழுது மனம் அமைதியடையும். நிகழ்காலத்தில் வாழலாம். இதுவே தியானம்.
தன்னை அறிதல்
நம்மிடம் ஐந்து அடுக்குகள் உள்ளன. அன்னமயம் / பிராணமயம்/ மனோமயம் / விஞ்ஞானமயம் / ஆனந்தமயம். 5 வது அடுக்கு ஆனந்தமய கோசமே நான். இந்த உணர்வில் எப்பொழுதும் வாழ வேண்டும். அதற்கு அடிக்கடி மூச்சில் கவனம் செலுத்துங்கள்.
ஒரு மண்டலம் மூச்சில் கவனம்
48 நாட்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடம் மூச்சில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்குள் இருக்கின்ற ஆன்மாவின் சக்தியை உணரலாம். மூட்டு வலி, கழுத்து வலி, இதய வலி எதுவுமே வராது. வளமாக நலமாக வாழலாம்.
நமது வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமெனில் மூச்சில் கவனம் செலுத்துங்கள். மூச்சை கவனித்தால் நிகழ்காலம் மகிழ்ச்சியாக இருக்கும். நான் அழியாத ஆன்மா என்ற உணர்வு பிறக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji