08
Nov
தொப்பைக்கு குட்பை! காஞ்சனாசனம்
பொதுவாக மனிதர்களிடத்தில் ஒரு கர்வம் உண்டு.
நான் மிக புத்திசாலி. ஒரு பொருளைப் பார்த்தவுடன் அது, நல்லதா? கெட்டதா? என்று கண்டுபிடித்து விடுவேன். என்னை யாரும் ஏமாற்ற முடியாது!
என்று நினைத்து கொள்வார்கள்.
உண்மை தான்! நிறைய மனிதர்கள் தங்கள் புத்திக் கூர்மையை பயன்படுத்தி நன்கு தொழில் புரிந்து, சாதுர்யமாக பேசி, தொழிலில் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
கணிசமான லாபம் இந்த வருடம் கிடைத்தது. அடுத்த வருடம் இதைவிட கணிசமான லாபம் பெற முயற்சி எடுப்பேன். வெற்றி பெறுவேன்
என்று சொல்லி உழைக்கிறார்கள். இதில் தவறு கிடையாது! ஆனால். ஒரு விஷயம். இவர்கள் தங்கள் உடலில் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்தை கணிசமாக இழந்து வருகிறார். அதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை!
நல்ல கணிசமான லாபத்திற்காக அல்லும் பகலும் உழைத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய பலவீனம், முதுகு வலி, அல்சர் உள்ளிட்ட வியாதிகளும் கணிசமாக இவர்களுக்கு வந்துவிடுகின்றன.
இனி கவலை வேண்டாம்! உடலுக்கு நலமும், உள்ளத்திற்கு அமைதியும் தரும் காஞ்சனாசனம் தினமும் காலையில் 15 நிமிடம் ஒதுக்கி, இந்த ஆசனத்தை செய்தால், அதன் மூலம் உங்களுக்கு கணிசமான பலன்கள் கிடைக்கும். எனவே இந்த ஆசனத்தை தினமும் செய்து உடல் ஆரோக்கியத்திற்கு முதலில் கணிசமான பலன்களை தேடிக்கொள்ளுங்கள். அதன் பிறகு தொழில் லாபம் ஈட்ட பாடுபடுங்கள்!
காஞ்சனாசனம் செய்முறை:
- விரிப்பில் இரு கால்களையும் நன்கு அகற்றி நிற்கவும்.
- பிறகு மெதுவாக குனிந்து இரு கைகளையும், இரு கால்களுக்கு பின்னால் கொணர்ந்து, கை விரல்களை கால் பாதத்தின் மீது பிடித்து நிற்கவும்.
- இதே நிலையிலேயே சாதாரண மூச்சில் 15 வினாடிகள் இருக்கவும்.
- பின்னர் ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் ஒருமுறை பயிற்சி செய்யவும்.
இந்த ஆசனத்தால் கிடைக்கும் பலன்கள்…
மலச்சிக்கல் வராது
வியாதிகளுக்கு மூல காரணமே மலச்சிக்கல்தான். இந்த ஆசனமானது மலச்சிக்கலை நீக்குகிறது. சிறுகுடல், பெருங்குடல் சுத்தமாவதுடன் உடல் கழிவுகள் சரியாக வெளியேறும். அதனால் நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கலாம்.
தோள்பட்டை வலி நீங்கும்
தோள்பட்டை வலி நீங்கும். அதன் ஏற்றம் இறக்கமும் சரியாகும். கூன் நிமிரும்! ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழகிய உடல் தோற்றம் கிடைக்கும்.
தொந்தி போடாது
அதிகமான வயிற்று தசை குறையும். முக்கியமாக தொந்தியை குறைக்கும் ஆசனம் இது.
கழுத்து வலி வராது
கழுத்துவலி வராது. கழுத்து சார்ந்த எலும்புகளும் தேய்மானமின்றி நன்றாக இயங்கும்.
முதுகு வலி நீங்கும்
அடி முதுகு வலி, நடு முதுகு வலி, கழுத்து முதுகு வலி உள்ளிட்டவை நீங்கும்.
மார்பு பகுதி பலம் பெரும்
இதயம், நுரையீரல், மார்பு பகுதி உள்ளிட்டவை பலம் பெற்று நன்றாக இயங்கும்.
ஆண்மைக் கோளாறு சரியாகும்
ஆண்மைக்கோளாறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வீரிய சக்தி அதிகமாகும். பெண்களுக்கு அதிக வெள்ளைப்படுதல், நீர்க்கட்டி முதலிய பிரச்சனைகள் தீரும்.
கண்ணாடிக்கு அவசியமிருக்காது
கண் நரம்புகள் சிறப்பாக இயங்கும். எவ்வளவு வயதானாலும் கண்ணாடி அணியாமல் வாழலாம். உங்கள் குழந்தைகளை இப்போதிருந்தே இந்த ஆசனத்தை செய்ய சொல்லுங்கள். அப்படி செய்து வந்தால் வளர்ந்த பிறகு கண்ணாடி அணிய அவசியமிருக்காது.
நீரிழிவும் பறந்தோடும்
இன்று நம் நாட்டில் எத்தனையோ பேர் நீரிழிவினால் அவதிப்படுகின்றனர். தினமும் மாத்திரை, இன்சுலின் ஊசி என அல்லல் படுகிறார்கள். தினமும் இந்த ஆசனத்தை பொறுமையாக காலை / மாலை 10 நிமிடம், இரண்டு முறை செய்யுங்கள். தவிர, தினமும் முருங்கைக் கீரையை ஒரு கப் அளவு சாப்பிடுங்கள். 40 நாளில் கணையம் மிக சிறப்பாக இயங்கும். நீரிழிவும் பறந்து விடும்.
தவிர, இன்றைய காலத்தில் 20 வயது நிரம்பிய ஆண்களும் பெண்களும் கூட நீரிழிவினால் அவதிப் படுகிறார்கள். அதனால் திருமணம் ஆன பின்பும் குழந்தை பாக்கியமில்லாமல் மன உளைச்சல் அடைகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நீரிழிவிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்
வாயு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த ஆசனம் ஒரு வரப்ரசாதமாக அமையும். ரத்த அழுத்தம் நிச்சயமாக வராது. ஏற்கனவே இருந்தாலும் விரைவிலேயே கட்டுக்குள் வரும்.
கால் வலி வராது
குதிகால் வலி, பாத வலி, கால் வீக்கம், மூட்டு வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாகும். கால்கள் கைகள் நன்றாக வலுப்பெறும். நீங்கள் திடமாக வாழலாம்.
உடல் நன்றாக வளையும்
இந்த ஆசனத்தால் உடலுக்கு நன்றாக வளையும் தன்மை கிடைக்கும். உடல் எடை அதிகமாக இருத்தல், குனிந்து நிமிர்தலில் சிரமம் இருத்தல், மாடிப்படிகளில் ஏறினால் மூச்சு வாங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். வேகமாக நடக்கவும் ஓடவும் முடியும்.
பரம்பரை பரம்பரையாக ஒரு சிலர் குண்டாக இருப்பர். அவர்கள் இந்த ஆசனம் செய்தால், உடல் சதை குறைவதற்குள்ளாகவே உடல் வளையும் தன்மை கிடைத்துவிடும். பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படும் படி சுறுசுறுப்பாக செயல்படலாம். தொடர்ந்து பயிற்சி செய்தால் அதிக உடல் எடையும் கட்டுக்குள் வரும்.
ஆசனத்துடன் உணவு முறைகள்…
- மஞ்சள் கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, புதினாவை உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
- செப்பு சொம்பில் தண்ணீர் விட்டு துளசி இலைகளை அதில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து தினமும் குடிக்கவும்.
- கொத்துமல்லி தழை சாற்றை வாரம் ஒரு முறை பருகவும்.
- மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகளை மாதம் இருமுறை உண்ணவும்.
பார்லி கஞ்சி
- பார்லியை வறுத்து உடைத்து கைப்பிடி அளவு எடுத்து கொள்ளுங்கள்.
- அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி அத்துடன் ஒரு சிறிய துண்டு சுக்கு, அதிமதுரம் நசுக்கி சேர்க்கவும்.
- உளர் பழங்களில் சீமை, அத்திப்பழம், கஜூர்காய் உள்ளிட்டவற்றை தலா 4 எண்ணிக்கையில் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டவும்.
- பின்னர் தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது சுத்தமான தேன் சேர்த்து, காலை / மாலை உணவாக உட்கொள்ள வேண்டும்.
- இந்த கஞ்சியை வாரம் ஒரு முறை குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் நீங்கும். உடலும் புத்துணர்ச்சி பெரும்.
எனவே வாசகர்களே காஞ்சனாசானம் தினமும் செய்யுங்கள். மேலே குறிப்பிடப் பட்டுள்ள உணவு முறையும் கடைபிடியுங்கள். உங்கள் உடலிலும் மனதிலும் ஆரோக்கியமும் அமைதியும் நிலைத்து நிற்கும். அதன் பிறகு தொழிலிலும் லாபம் அதிகம் கிடைக்கும்.