13
Sep
நோய்கள் நெருங்காது! பரிவர்த்த கபாத சர்வாங்காசனம் செய்தால்
வாழ்கை எப்படிருக்கிறது என்று கேட்டால், “ஏதோ வாழ்கிறேன். என்ன செய்வது. உடலில் பல பிரச்சனைகள். கவலைகள் ஒன்றா இரண்டா சொல்வதற்கு” என்பார்கள்.
இப்படி யாரிடமும் நீங்கள் வருந்த தேவையில்லை. காரணம் நீங்கள் பரிபூரணமானவர். பரிபூரணம் என்பது இறைவனும் இயற்கையும் மட்டுமே. அந்த பரிபூரணமான இறைவன் ஜோதி வடிவில் நம் உடலுக்குள் வீற்றிருக்கிறார். ஆம் அதனால் தான் திருமூலர் தனது திருமந்திரத்தில், “இறைவன் எங்கிருக்கிறார் என்று சொல்லும் பொழுது எங்கெல்லாம் உயிரினம் இருக்கிறதோ அதனுள் இறைவன் ஒளிவடிவாய் இருக்கின்றார். இவர்கள் நடமாடும் தெய்வம். இன்று ஒரு இடம், நாளை மற்றொரு இடத்தில இருப்பார்கள். எங்கெல்லாம் திருக்கோயில் உள்ளதோ அங்கு நிலையான கடவுளாக இருக்கிறார்” என்கிறார். ஆக நம் உடலுக்குள் பரிபூரணமான பரம்பொருள் பேரொளியாக இருப்பதை உணராத காரணத்தால்தான் நம் பலவித உடல் மன பிணிகளுக்கு ஆளாகிறோம். அந்த பரிபூரண பரம்பொருளை உணர, அனுபவிக்க யோகக்கலைதான் ஒரே வழி.
யோகம் என்றாலே பரிபூரண பரம்பொருளுடன் இணைதல் என்று பொருள். ஆசனம் என்றால் நிலையான இருக்கை. யோகாசனம் செய்தால் நிலையான இருக்கையின் மூலம் பரிபூரண பரம்பொருளிடம் இணையலாம். அவரின் சக்தியை பெற்று உடல், மன பிணிகள் நீங்கி செல்வ வளத்துடன் நம்மை வாழ வைப்பதுதான் பரிவர்த்த கபாத சர்வாங்காசனத்தின் சிறப்பு.
ஆசனம் எப்படி செய்வது?
- விரிப்பில் நேராக படுக்கவும்.
- இரு கால்களையும் மெதுவாக இடுப்பிற்கு மேல் உயர்த்தவும்.
- கைகள் இரண்டையும் இடுப்புப் பக்கத்தில் பிடிக்கவும். இதுதான் சர்வாங்காசனம்.
- இப்பொழுது மெதுவாக கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் முடிந்தளவு விரிக்கவும்.
- இப்படியே சாதாரண மூச்சில் 15 முதல் 25 நம்பர்களை என்னும் வரை நிலையாக இருக்கவும்.
- பிறகு இரு கால்களையும் ஒன்று சேர்க்கவும்.
- பின்னர் மெதுவாக கைகளின் உதவியால் கால்களை தரைக்கு இடுப்பை தளர்த்தி கொண்டு வந்து படுக்கவும்.
- இதே போல் இரண்டு முறை செய்யவும்.
முக்கிய குறிப்பு
- இதய பலவீனமுள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தும், நீரிழிவு, ஆஸ்துமா உள்ளவர்கள் யோகா ஆசிரியரின் நேரடி அறிவுரைப்படி இந்த ஆசனத்தை பயிலவும்.
- மற்றபடி, ஆரோகியமாக உள்ளவர்கள் ஒரே ஒரு மறை மட்டும் யோகா வல்லுனரின் மேற்பார்வையில் இந்த ஆசனத்தை பயில்வது சிறப்பு.
பலன்கள்
- என்றும் இளமையுடன் வாழலாம்.
- நோய்களே வராது.
- நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும்.
- மலச்சிக்கல் தீரும்.
- தைராய்டு பிரச்சனை நீங்கும்.
- இடுப்பு சதைகள் குறையும்.
- இளமையுடன் வைக்கும்.
- ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கும்.
- மலட்டுத்தன்மை நீங்கும்.
- இதயம் பாதுகாக்கப்படும்.
- ரத்த அழுத்தம் வராது.
- ஆஸ்துமா, சைனஸ், டான்சில் நோய்கள் வரவே வராது.
ஆசனத்துடன் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்
- தினம் அருகம் புல் சாறு எடுத்து கொள்ளுங்கள்.
- தேங்காய் துண்டுகள் இரண்டு சாப்பிடுங்கள்.
- கருப்பு திராட்சை பழம் அடிக்கடி சாப்பிடுங்கள்.
- பப்பாளி பழமும் உண்ணுங்கள்.
- வெண்பூசணி உணவில் அதிகம் சேருங்கள்.