பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 011
சமாதி
தியானம் முழுமையாக கைகூடி, புலன்களை அடக்கி ஆளும் தன்மை கிடைத்தால் சமாதி விரைவில் கை கூடும்.
சமாதியின் நான்கு நிலைகள்
சவித்ரக சமாதி
தூலப் பொருட்களை மையமாக வைத்து தியானம் சாதனை செய்தலாகும்.
சவிசரா சமாதி
முதல் இரு நிலையையும் தன் வயப்படுத்தி செய்யும் சாதனை முறையாகும்.
சானந்த சமாதி
முதல் இரு நிலையையும் கடந்து கால, சூக்குமத்தை கடந்து உயிர் இன்பம் அடையும் நிலை.
சாஸ்மிதா சமாதி
மெய்யுணர்வுடன் மட்டும் இருக்கும் சமாதி நிலையாகும்.
நாம் ஒவ்வொரு நிலையாக முன்னேற வேண்டும். முதலில் உருவ வழிபாடு, பின், சூக்கும வழிபாடு தியானம், பின் தன்னை உணரும் அருள் நிலை, பின் மெய்யுணர்வு நிலைக்கு சாஸ்மிதா சமாதியடையலாம்.
இந்த சமாதி நிலை அடைய உடல் வசியம் ஆசனத்தாலும் பிராண வசியம், நாடி சுத்தி பயிற்சியிலும், மனோ வசியம், தியானத்தாலும் தொடர்ந்து பயின்று சாதனை பெற்றிருக்க வேண்டும். சமாதி நிலை கைகூடினால் வாழ்வில் ஆரோக்கியம் அமைதி, நல்ல செல்வ செழிப்பு, ஆத்மானந்தம் உண்டாகும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji