பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 012
சம்பிரஜ்ஞாத சமாதி
இது ஆன்மாவை முத்தி நிலைக்கு அழைத்து செல்வதில்லை. இதன் மூலம் ஒரு மனிதன் எல்லா ஆற்றல்களையும் பெறலாம். அனால் ஒரு சிறிய ஆசையினால் மீண்டும் கீழ் நிலைக்கு வரச் செய்துவிடும்.
அசம்பிரஜ்ஞாத சமாதி
இது தான் முக்தியை கொடுக்கும். மனதில் எழும் எண்ணங்களை அளிக்க மனதை தியானம் செய்து உடன் எண்ணத்தை விருத்தியடைய செய்யாமல் விரட்ட வேண்டும். மனதில் எந்த சித்தமும் வரவிடாமல் தடுத்து மனதை முழுமையாக வெறுமையாக்க வேண்டும். இதுவே முக்திக்குச் செல்லும் வழியாகும்.
அனுபவ நினைவுகள்
நாம் வாழ்வில் அனுபவித்தவை எல்லாம் பதிவுகளாக பதிந்துள்ளது. தக்க சமயத்தில் நினைவுகளாக மேலெழும்பி வரும். இந்த நினைவுகளையும் போக்கிவிடும்படி செய்வது தான் அசம்பிரக் ஞாத சமாதியின் இலட்சியமாகும்.
அசம்பிரக் ஞாத சமாதி ஒரு மனிதனுக்கு கிடைத்தால் அவன் வாழ்க்கை புனிதமான வாழ்க்கையாக மாறிவிடும். இயற்கையின் முழு ஆற்றலும் அறிவும் அவனிடமிருக்கும். சரியாக தக்க குருவிடம் யோகம் பயின்று சாதனையை விடாமல் செய்து வந்தால் வெற்றி நிச்சயம் கிட்டும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji