09
Jul
ரத்த அழுத்தம் வராமல் தடுப்பதோடு ரத்த அழுத்தம் வந்துவிட்டாலும் விரைவில் பூரணமாக குணப்படுத்தும் மற்றுமொரு எளிய ஆசனம் வஜ்ராசனம்.
ரத்த அழுத்தத்திற்கு எது முக்கிய காரணம்:
மாமிசம் போன்ற அதிக கொழுப்பு உணவால் ரத்தத்தில் கொலெஸ்ட்ரோல் அதிகமாகும். இதனால் ரத்த குழாய்கள் தடித்து விடும். மாமிசம் மட்டுமல்ல – இது போன்ற கொழுப்பு மிகுந்த உணவுகளால் தான் ரத்த அழுத்தம் அதிகமாகும். அதனால் தான் யோகா செய்யும் போது மாமிசம் தவிர்க்க வேண்டும் என்று வலிவுறுத்திருகிறோம்.
ஏன் சீரான ரத்த அழுத்தம் தேவை:
சீரான ரத்த அழுத்தம் இருந்தால் தான் உடலில் அணைத்து பகுதிகளுக்கும் ரத்தம் நல்ல முறையில் சென்றடையும். நம் வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தில் மின் அழுத்தம் 200 – லிருந்து 240 வோல்ட் இருக்க வேண்டும். அதற்கு குறைந்தால் மின் விளக்குகள் கண் சிமிட்டும்; மின்சாதனங்கள் பழுதடையும். வீட்டுக்கு எப்படி சீரான மின் அழுத்தம் தேவையோ அதுபோல் நம் உடல் நன்கு இயங்க சீரான ரத்த அழுத்தம் கட்டாயம் தேவைப்படுகிறது.
நம் உடலில் உள்ள ரத்த குழாய்கள் அனைத்தையும் எடுத்து ஒரே நீளமாக பிடித்தால் அதன் நீளம் எழுபதாயிரம் மைல்கள் இருக்குமாம். இந்த ரத்தக் குழாய்கள் தான் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ரத்த குழாய்கள் நன்கு சுருங்கி விரியும் நிலையில் இருக்க வேண்டும்.
இவர்கள் செய்ய வேண்டாம்:
- மூட்டு வலி உள்ளவர்கள்.
- கால்களில் அல்லது மூட்டில் அல்லது கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
- உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் – வஜ்ராசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
என்னென்ன பிரச்னைகள் வரலாம்:
- ரத்த அழுத்தம் வந்தால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரலாம்.
- மூளை பாதிக்கப்பட்டு பக்க வாதம் வரலாம்.
- கண் பார்வை இழக்க நேரிடலாம்.
- சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
வஜ்ராசனம் எப்படி செய்வது?
- விரிப்பில் அமரவும்; இரு கால்களையும் நீட்டவும்.
- ஒவ்வொரு காலாக மடித்து இரு கால்களையும் மடக்கி இரண்டு குதி கால்களும் புட்டத்தில் படும்படி அமரவும்.
- இரு கைகளையும் கால் மடியில் வைக்கவும் கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இது போல் ஐந்து நிமிடம் செய்துவிட்டு உங்கள் இரு உள்ளங்கைகளையும் இதயத்தில் வைத்து, “எனது இதயம் சீராக இயங்குகிறது, ரத்த ஓட்டம் நன்றாக பாய்கிறது” என்று மனதுக்குள் மூன்று முறை கூறிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
இந்த யோகப்பயிற்சியை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயிற்சி செய்தால் அது விரைவில் கட்டுக்குள் வரும். தொடர்ந்து பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் அறவே நீங்கும். ரத்த அழுத்தம் இல்லாதவர்களும் அவசியம் இந்த பயிற்சியை செய்யுங்கள். உங்களது பண்புகள் மாறும்; மனதில் அமைதி நிலவும்; எவ்வளவு வயதானாலும் ரத்த அழுத்தம் வராது.