சமான வாயு முத்திரை
செய்முறை:
- விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் நிமிர்ந்து உட்காரவும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- தலை முதல் கால் வரை உடலில் உள்ள எல்லா டென்ஷன், மன அழுத்தம் உடலை விட்டு வெளியேறுவதாக எண்ணவும்.
- இப்போது கண்களை திறக்கவும்.
- நமது கட்டை விரலுடன் மற்ற நான்கு விரல்களையும் குவித்து இணைக்க வேண்டும்.
- விரல்களுக்கு இடையே ஒரு வெற்றிடம் உண்டாகும் படி செய்யவும்.
- இரு கைகளிலும் இதே போல் செய்யவும்.
நேரம்:
- முதலில் 5 நிமிடங்கள் செய்யவும்.
- பின் ஒரு மாதத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யவும்.
- பின் சாதாரண நிலைக்கு வரவும்.
பலன்கள்:
- உடலில் பஞ்ச பூதங்களும் சமமாக இயங்கும்.
- நோயற்ற வாழ்வு தரும்.
- துணிவு, விடாமுயற்சி பண்புகள் வளரும்.
- மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.
- சோம்பல் நீங்கும்.
- மன சோர்வு நீங்கும்.
- தீய உணர்வுகள் தாக்காது.
- மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு பாய்கிறது.