மாணவர்கள் நியாபக சக்தி வளர அர்த்த சிரசாசனம்
செய்முறை:
- விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
- அதில் இருந்து எழுந்து, உச்சந்தலை தரையில் படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்துக் கொள்ளவும்.
- இரு கால்களையும் கால் பெருவிரல்கள் தரையில் படும்படி குன்று போல் மெதுவாக உயர்த்தவும்.
- இந்நிலையில் சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.
- இது போல் 3 முறைகள் செய்யவும்.
பலன்கள்:
- பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் நியாபக சக்தி நன்கு வளரும்.
- படித்தது உள்ளத்தில் பதியும்.
- வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும்.
- பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.
- சோம்பல் நீங்கும்.
- மூளை செல்கள் புத்துணர்வுடன் இயங்கும்.
மாணவ செல்வங்களுக்கு உகந்த மிக அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள், அனைவரும் செய்யலாம். யாருக்கெல்லாம் நியாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து நியாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.