செயல்முறை:
- தரையில் விரிப்பு விரித்து கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- கையில் உள்ள கட்டை விரல் ஆள் காட்டி விரல் நுனியில் தொட்டு அந்த இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கவும்.
- மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:
- கோபம், மன அழுத்தம், டென்ஷன் நீக்கும்.
- ஞாபக சக்தி வளரும்.
- மனச் சோர்வு நீங்கும்.
- புத்துணர்ச்சியுடன் திகழலாம்.