செயல்முறை:
- தரையில் கிழக்கு திசை நோக்கி ஒரு விரிப்பு விரித்து அதில் அமரவும்.
- இரு கால்களையும் நீட்டிக் கொள்ளவும்.
- இடது காலை மடித்து வலது கால் தொடையில் வைக்கவும்.
- பின் வலது காலை மடித்து இடது கால் தொடை மீது வைக்கவும்.
- முதுகுஎலும்பு நேராக இருக்க வேண்டும்.
- பின்பு மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடவும்.
பலன்கள்:
- கோபம், டென்ஷன், பிரஷர் குறையும்.
- மன ஒருமைப்பாடு ஏற்படும்.
- மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக பாயும்.
- இருதய துடிப்பு சீராகும்.
- பிராண ஓட்டம் சீராகும்.
- தீய பண்புகள் அழியும்.
- அமைதியான மன நிலையில் வாழலாம்.