முகுள முத்திரை
செய்முறை:
- விரிப்பில் கிழக்கு நோக்கி வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் சாதாரணமாக அமரவும்.
- உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- கண்களை மூடி ஒரு ஐந்து முறை இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியேவிடவும்.
- நமது நான்கு விரல்களையும் கட்டை விரலோடு இணைக்க வேண்டும்.
- விரல்கள் மேல் நோக்கியபடி இருக்க வேண்டும்.
- லேசான அழுத்தும் விரல்களில் கொடுக்கவும்.
- ஐந்து நிமிடங்கள் இரு கைகளிலும் செய்யவும்.
- காலை மாலை இரு வேளையும் செய்யலாம்.
பலன்கள்:
- மன இருக்கம், மன அழுத்தம் நீக்கும்.
- இதயம் பாதுகாக்கப்படும்.
- கோபம் குறையும்.
- பஞ்ச பூத சக்தி கிடைக்கும்.
- உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
- நாளமில்லா சுரப்பிகள் நன்கு இயங்கும்.
- பிராண ஓட்டம் நன்றாக இருக்கும்.