வாயு முத்திரை
செயல்முறை:
  1. தரையில் ஒரு விரிப்பு விரித்து கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  2. கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை விடவும்.
  3. பின் நமது ஆள் காட்டி விரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலை சிறிது அழுத்தம் கொடுக்கவும்.
  4. மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கி சேர்ந்திருக்க வேண்டும்.
  5. இரு கைகளில் இவ்வாறு செய்யவும்.
  6. முதலில் 5 நிமிடங்கள் செய்யவும்.
  7. தொடர்ந்து பயிற்சி செய்து, 10 முதல் 15 நிமிடங்கள் செய்யலாம்.
  8. காலை, மதியம், மாலை மூன்று வேலைகள் செய்யவும். மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
பலன்கள்:
  1. பக்கவாதம் நீங்கும்.
  2. உடல் வலிகள் நீங்கும்.
  3. முதுகு தண்டு வலிகள் நீங்கும்.
  4. மூட்டு வலி, அஜீரணம், பசியின்மை, மன இருக்கம், படப்படப்பு நீங்கும்.
  5. வாத வலி நீங்கும்.
  6. உடலில் தெம்பு கிடைக்கும்.