ஆண் மகன் என்றாலே வீரம் பொருந்தியவன் என்று அழைப்பர். போருக்குச் செல்லும் போர் வீரர்கள் என்று ராணுவத்தினரை அழைப்போம். நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பத்தைப் பிரிந்துதான் இருக்க வேண்டும். மனைவியுடன் இருந்தால், கணவன் – மனைவி சிற்றின்ப சேர்க்கை அடிக்கடி நிகழும். அப்பொழுது கணவனின் விந்து சக்தி விரயமாகும். அவனது வீரம் (விந்து சக்தி) குறைந்துவிடும். மனத்தளர்ச்சி ஏற்படும். எனவேதான் ராணுவ வீரர்கள் குடும்பத்தைப் பிரிந்து தனது வித்தாற்றலை வீரமாக்கி, வீரர்கள் ஆகிறார்கள்!
வீரம் என்றால் வித்தாற்றல், விந்து சக்தி. இதனை மிகக் கவனமாக கையாள வேண்டும். நல்ல புத்திரர்களை ஈன்றெடுக்க மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
இன்று சமுதாயச் சூழல், உடல் சார்ந்த கிளர்ச்சிகளை அதிகப்படுத்தி, பணம் சம்பாதிக்க எதையும் செய்யத் தயாராக உள்ளதால் இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள், ஏன் பெரியவர்களுக்கு கூட மன சஞ்சலம் அதிகம் உள்ளது. எனவே பல ஆண்கள், இரவுக் கனவில் தனது விந்து சக்தியை இழந்து விடுகின்றனர். இதனை வெளியே சொல்லவும் வெட்கப்பட்டு, உடல் மெலிந்து அசதியுடனும், மனக்கவலையுடனும் வாழ்கின்றனர். அவர்களெல்லாம் இனி கவலைப்படத் தேவையில்லை. இதோ இந்தப் பிரச்சனையைப் போக்குவதற்கு வீரயோக முத்ரா உள்ளது. பெயரைப் பார்த்தீர்களா வீரம் என்றால் விந்து சக்தி தான். அதனை காக்கின்றதால் தான் இந்த ஆசனத்திற்கே வீரயோக முத்ரா என்ற பெயர் வந்துள்ளது.
வீரயோக முத்ரா எப்படிச் செய்வது?
- முதலில் பத்மாசனம் போடவும்.
- இரு கைகளையும் சேர்ந்தாற்போல் இறுக மூடி, தொப்புளில் வைத்தபடி லேசாக அழுத்தவும்.
- மூச்சை வெளியில் விட்டு, மெதுவாக கீழே குனியவும். இதே நிலையில் 15 விநாடிகள் இருக்கவும்.
- பின்னர் மெதுவாக நிமிர்ந்து, கைகளை விலக்கி, சாதாரணமாக அமரவும். இதே போல மூன்று முறை செய்யவும்.
குறிப்பு:
உடல் பருமன் உள்ளவர்கள், பத்மாசனம் போட முடியாதவர்கள், சுகாசனத்தில் அமர்ந்து பயிற்சி செய்யலாம். தொடர்ந்து பயிற்சி செய்யும்பொழுது இரண்டு மாதத்தில் உடலுக்கு வளையும் தன்மை வரும். பிறகு பத்மாசனம் போடலாம்.
இந்த ஆசனம் செய்ததும் கண்களை மூடி, இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கவும். பின்னர் மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதுபோல 10 முதல் 15 முறை செய்யவும். மூச்சை வெளியே விடும்பொழுது நமது ஆழ் மனதிலுள்ள காமக்கசடுகள், தீய எண்ணங்கள் உள்ளிட்டவை மூளை பதிவுகளிலிருந்து வெளியேறுவதாக நினைக்கவும். பின்னர், குளிர்ந்த நீர் ஒரு டம்ளர் பருகவும்.
இந்த முத்ராவால் கிடைக்கும் பலன்கள்…..
- தூக்கத்தில் விந்து ஒழுகுவது தடுக்கப்படுகிறது.
- நமது எண்ணத்தினால் உடல் சூடாகிறது. அந்தத் தீய எண்ணங்களால் குடலானது அசுத்தமடைகிறது.
- வயிற்றை இரு கைகளால் அமுக்கிக் குனியும் பொழுது, குடல் பகுதியில் உள்ள அதிக உஷ்ணம் வெளியேறுகிறது. அதனால் குடல் சூடு தணிகிறது.
- தீய எண்ணப் பதிவுகளும் அழிகிறது.
- முதுகெலும்பு இறுக்கமாகும் – முதுகெலும்பு இறுகும். முதுகெலும்பு பிடிப்பு நேராகும். முதுகெலும்பு நரம்புகள் பலப்படும்.
- குடல் இறக்கம் வராது – குடல் இறக்கம் (அப்பென்டிசைடிஸ்) வராது. ஆரம்ப நிலை குடல் இறக்கம் உள்ளவர்கள், இந்த ஆசனம் செய்தால் விரைவிலேயே குணமாகும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.
- இதயமும் நுரையீரலும் சக்தி பெறும் – இதயம் மற்றும் நுரையீரலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். நுரையீரல் விரிவடையும். சுத்தமான காற்றும் நுரையீரலுக்குக் கிடைக்கும்.
- மன இறுக்கம் நீங்கும் – மன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன், கவலை உள்ளிட்டவை நீங்கும்.
- சுறுசுறுப்பு உண்டாகும். மன அமைதி கிடைக்கும். தீய எண்ணங்கள் அழியும்.
- ஈஸ்னோபிலியா, இருமல், ஜலதோஷம், வாயு, பித்தம், கபம், உடற்சூடு முதலிய பிணிகள் அகலும்.
- மலச்சிக்கல் நீங்கும்.
உணவு முறைகள் எப்படி?
- அதிகமாக மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.
- பன்னீர் ரோஜா இதழை தேனில் ஊறவைத்து, அதனை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும்.
- தண்ணீரில் சீரகத்தைப் போட்டு, லேசாக சுட வைத்து, அந்த நீரை அருந்தவும்.
- வாரம் ஒரு நாள், இளநீரில் வெந்தயத்தை கைப்பிடியளவு போட்டு அரைமணி நேரம் ஊறியதும், இளநீரை குடித்து வெந்தயத்தைச் சாப்பிடவும்.
- இரவில், தனியாத்தூளுடன் கருப்பட்டி கலந்து சுடவைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
- பழங்கள் – அத்திப்பழம், கொய்யாப்பழம், மாதுளை, கருப்பு திராட்சை உள்ளிட்டவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
- கீரைகள் – அரைக்கீரை, பசலிக் கீரை, முருங்கைக்கீரை, கொத்துமல்லித்தழை, புதினா உள்ளிட்டவற்றையும் உணவில் அவ்வப்போது சேர்க்கவும்.
- பயறு வகைகள் – எள்ளுருண்டை, கருப்பு மூக்குக்கடலை, கொள்ளு ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்.
இரவு படுப்பதற்கு முன்பாக வாட்ஸ் அப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இரவு சாப்பாட்டை 8 மணிக்குள் முடித்துவிட்டு, இரவு 10 மணிக்குள் தூங்கிவி்ட வேண்டும். முக்கியமாக, செல்போனை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் உபயோகிக்கவும். அப்பொழுதுதான் உடலில் வீரியம் தங்கும். இளமையுடன் வளமாக வாழலாம்!
வாழ்வுக்கான சேமிப்பு:
பிற்காலத்தில் வயது முதிரும் பொழுது நலமாக வாழ, பொருட்களையும் பணத்தையும் இப்போதிருந்தே சேமிக்கிறோம். சில பாலிசிகளையும் போடுகிறோம். இதில் தவறில்லை. இப்படிச் சேமித்தப் பணத்தை நன்றாக செலவு செய்து, நலமாக வாழ, மனிதர்களின் உடலில் உயிர் ஆற்றல் (விந்து) வேண்டும். எனவே அதையும் சேமிக்க வேண்டும். தினமும் விழிப்புடன் இருந்து நமது உயிர் ஆற்றலை பிற்கால வாழ்விற்காக சேமிக்க வேண்டும். இளமையல் சேமித்தால் முதுமை வாழ்வு நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
50 வயதில் எலும்பு தேய்மானம், மூட்டுவலி, இதய பலவீனம், மன அழுத்தம், ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட மூலகாரணம் நாம் நமது வீரியத்தை (விந்து சக்தி) அளவுக்கு அதிகமாக உபயோகித்து, வீண் விரயம் செய்வதால்தான்.
இதன் முக்கியத்துவத்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முதலில் நன்றாக உணர வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நண்பனாக உரிய முறையில் பயிற்றுவிக்க வேண்டும். வாழ்வில வெற்றியின் ரகசியம், இளமையின் ரகசியம், ஆரோக்கியத்தின் ரகசியம், மன அமைதியின் ரகசியம், புத்திக் கூர்மையின் ரகசியம் நாம், நமது உயிர் ஆற்றலை சரியான அளவில் பயன்படுத்துவதில்தான் அமைந்துள்ளது. இதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும். இதைத்தான் பாரதியார், ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா, உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்று பாடினார். அவர் சொல்லும் ஒளி படைத்த கண் என்பது நமது உடலிலுள்ள உயிர் ஆற்றல் என்பதை மட்டும் ஒருபோதும் மறக்கவே மறக்காதீர்கள்.