மன அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் யோகா
இன்றைக்கு மன அழுத்தம் டென்ஷன், கவலை, கோபம் எல்லாம் கிண்டர்கார்டன் படிக்கும் குழந்தைகளுக்கு கூட வருவதாக நிறைய ஆய்வுகள் சொல்கின்றன. அப்படி என்றால் நம்மைப் போல வளர்ந்தவர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கும்?
பொதுவாக எல்லா வியாதிக்கும் அடிப்படைக் காரணம் மன அழுத்தம் தான். மனவழுத்தம் ஏற்பட்டவுடன் நமது மூச்சோட்டம் மண்டலம் பாதிக்கப்படும். இந்த சமயங்களில் மூச்சின் இயக்கம் மிக அதிகமாக வெளியேறும். அதனைத் தொடர்ந்து ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். அதனை தொடர்ந்து ரத்த ஓட்ட மண்டலம் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படும்.
இந்த மன அழுத்தத்தினால்தான் மனிதர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயத்தில் ஓட்டை, கழுத்து வலி, முதுகு வலி, நரம்பு பலவீனம், ஒற்றைத் தலைவலி போன்ற பல நோய்கள் வருகின்றன.
மனிதனின் பண்புகளில் மாற்றம்…
மனித உடலில் தமோ குணம், ரஜோ குணம், சத்வ குணம் என்று மூன்று குணங்கள் உள்ளன.
தமோகுணம் காமம், பேராசை, கோபம், பொறாமை, சோம்பல் போன்ற கீழ்த்தரமான பண்புகளை கொண்டது.
ரஜோகுணம் கொண்டவர் நல்ல பண்புகள் கொண்டவராக இருப்பார். ஆனால், டாம்பீகமாக செயல்படுவார்.
சத்வகுணம் கொண்டவர் பொறுமை, அமைதி, பேரன்பு போன்ற நற்குணங்களை கொண்டவராக இருப்பார். இப்படி எல்லா மனிதர்களிடமும் கோபம், பொறாமை போன்ற ஏதோ ஒரு தீய எண்ணம் இரத்தத்துடன் கலந்து இருக்கும்.
இந்த குணங்களை அதிர்வலைகள் என்று அழைப்போம். ஒருவருடைய உடலில் இந்த மூன்று குணங்களின் அதிர்வலைகள் ரத்தத்துடன் கலந்து இருக்கும். மனதை அமைதிப் படுத்தும் யோகாசனங்களை நீங்கள் செய்யும்போது தமோகுண அதிர்வலைகளை படிப்படியாக மாறி ரஜோகுண அதிர்வலைகள் வரும். பிறகு சத்வகுண அதிர்வலைகள் அதிகமாகி விடும். அப்போது உங்கள் உடலில், மனதில் மனஅழுத்தம் என்பது நிச்சயமாக இருக்காது.
மன அழுத்தம் நீக்கும் யோகாசனங்கள்
சஸங்காசனம்
- விரிப்பில் கிழக்கு நோக்கி முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
- இப்போது மூச்சை மெதுவாக வெளியிட்டுக் கொண்டே குனிந்து நெற்றி தரையில் படும்படி அமரவும்.
- கைகள் இரண்டும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
- சாதாரண மூச்சில் இப்படியே ஒரு நிமிடம் இருக்கவும்.
இந்த ஆசனம் செய்யும் போது நமது மூளை பகுதி, அதற்கு கீழ் உள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யுட்டரி, பீனியல் சுரப்பியில் உள்ள அழுத்தங்கள் வெளியேறுவதாக எண்ணவும். மூச்சை வெளியிட்டு நெற்றி தரையில் படும் போது உண்மையில் மூளைப் பகுதி மற்றும் கீழ் உள்ள இடத்தில் உள்ள டென்ஷன் வெளியேறுவதை உங்களால் உணர முடியும். இந்த ஆசனத்தை காலையிலும் மாலையிலும் மூன்று முறை செய்து வரவும்.
சாந்தியாசனம்
இந்த கலியுகத்தில் வாழும் அனைவரும் சாந்தி ஆசனம் நிச்சயம் செய்ய வேண்டும். செய்தால் மன அழுத்தம் இல்லாமல், ரத்த அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.
சாந்தி ஆசனம் செய்யும் முறை
- விரிப்பில் கிழக்கு திசையில் தலைவைத்து மேற்கில் கால் வைத்து நேராக கை கால்களை அகற்றி படுத்துக் கொள்ளவும். தலையை லேசாக இடப்பக்கம் சாய்த்து கொள்ளவும்.
- கைவிரல்கள் வானத்தைப் பார்த்து இருக்கவும் (படத்தைப் பார்க்கவும்). கண்களை மூடிக் கொள்ளவும். இப்போது உங்கள் மனதை சிநேகிதியாக்கி மனதின் மூலம் கீழ்க்கண்டவாறு பயிற்சி செய்யவும்.
- உங்கள் மனதை தலை வெளிச்தசைகளில் நிலைநிறுத்தவும். அதிலுள்ள எல்லா டென்ஷனையும், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன், அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று ரிலாக்ஸ் செய்யவும்.
- பின்பு உங்கள் மனதை தொண்டை வெளிச்சதையில் நிலைநிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன் அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி தளர்த்தவும்.
- பின்பு உங்கள் மனதை தோள்பட்டை வெளிச்சதைகளில் நிலைநிறுத்தி, அந்த தசைகளில் உள்ள எல்லா டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்து விட்டேன் என்று அந்த பகுதிகளை தளர்த்திக் கொண்டு வரவும்.
- பின்பு உங்கள் மனதை வலது கை இடது கை என ஒவ்வொரு பகுதியிலும் நிலைநிறுத்தி அதிலுள்ள டென்ஷன் அழுத்தத்தை பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி ரிலாக்ஸ் செய்யவும்
- பின்பு உங்கள் மனதை இதயத்தின் வெளித்தசைகளில் நிலைநிறுத்தவும். அதிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்தாக எண்ணி ரிலாக்ஸ் செய்யவும்.
- பின்பு உங்கள் மனதை வயிற்று வெளித்தசைகளில் நிறுத்தி அதில் உள்ள டென்ஷன், அழுத்தங்களை பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி ரிலாக்ஸ் செய்யவும்.
- பின் வலது கால் வெளித்தசைகள் இடது கால் வெளித்தசைகளில் நிலைநிறுத்தி ரிலாக்ஸ் செய்யவும். இப்போது தலை முதல் கால் வரை உடலின் வெளித்தசைகளில்…