நுரையீரலை வலுப்படுத்தும் கணேச முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 019
கொரோனா வராமல் தடுக்க
எந்த ஒரு வைரஸ் கிருமியும் தாக்காமல் இருக்க நமது நுரையீரல் சிறப்பாக இயங்க வேண்டும். இந்த கணேச முத்திரை நமக்கு நுரையீரலை நன்கு வலுப்படுத்துகின்றது. அதனால் நல்ல பிராணக் காற்றை உள் வாங்கி கரியமில வாயுவை வெளியேற்றுகின்றது.
மார்பு தசைகள்
மார்பு தசைகளை வலுவாக்கி நன்கு இயங்கச் செய்கின்றது. இதயவலி, இதய வால்வில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராது.
ஜீரண சக்தி
ஜீரண மண்டலம் நன்கு இயங்கும். அதனால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
தோள்பட்டை வலி
கணேச முத்திரை தோள்பட்டை வலி வராமல் தடுக்கவல்லது. கை தசைகள் நன்கு இயங்கும். தசை பிடிப்புகளை சரி செய்கின்றது.
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையையும், மனோ தைரியத்தையும் அளிக்க வல்லது கணேச முத்திரை. இவை இரண்டுமிருந்தால் நிச்சயம் கொரோனபயமிருக்காது. நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கவல்லது.
இரத்த ஓட்டம்
உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்கச் செய்கின்றது. இரத்த அழுத்தமின்றி வாழலாம்.
உற்சாகம்
சுறுசுறுப்பு, உற்சாகம் அளிக்கும் கணேச முத்திரையை தினம் பயின்று வைரஸ்லிருந்து விடுதலை பெற்று வளமாக வாழுங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji