நலம் தரும் நாற்காலி யோகா
கொரோனா வராமல் தடுக்கும் முத்திரைகள்
இன்று நமது நாட்டில் எல்லோர் மனதிலும் ஒரு பய உணர்வு இருக்கிறது. அதாவது, ‘கொரோனா நம்மைத் தாக்கிவிடுமோ?’ என்கிற அச்ச உணர்வுதான் அது! இது போன்ற அச்ச உணர்வு நீங்கவும், எந்தவொரு நோய் கிருமியும் நம்மை தாக்காமல் வளமாக வாழவும் நம் கையில் அற்புதக்கலையான ‘யோகக்கலை’ உள்ளது.
மாமுனி பதஞ்சலி மகரிஷி தனது அஷ்டாங்க யோகத்தில் ஒவ்வொரு மனிதனும் தனது உடலையும் உள்ளத்தையும் எப்படி வளமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எந்தவொரு நோய் கிருமியும் தாக்காமல் வாழ்வதற்குரிய அருமையான எளிமையான பயிற்சிகளை அக்காலத்திலேயே நமக்கு அருளியுள்ளார்.
அந்தப் பயிற்சிதான் ‘முத்திரை’. இந்த முத்திரை எப்படி மனிதனுக்குப் பயன்படுகிறது என்பதை முதலில் நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டால், ஒவ்வொருவரும் நிச்சயமாக இந்தப் பயிற்சியைப் பயின்று வைரஸில் இருந்து விடுபட்டு வாழலாம்.
மனித உடலானது பஞ்சபூதங்களினால் ஆனது. மனிதனுடைய உடலுக்குள் ‘ராஜ உறுப்புகள்’ என்று சொல்லப்படக்கூடிய அற்புதமான உறுப்புகள் இருக்கின்றன. இந்த ராஜ உறுப்புகளுக்கும் பஞ்சபூதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் ஒட்டுமொத்த கன்ட்ரோலும் நமது கைவிரல்களில் உள்ளன. அதாவது, பெருவிரல் – நெருப்பு, சுண்டுவிரல் – நீர், மோதிர விரல் – நிலம், ஆள்காட்டி விரல் – காற்று, நடுவிரல் – ஆகாயம்.
பஞ்சபூதங்களும் அவற்றின் உள்ளுறுப்புகளும்
- நிலம் – மண்ணீரல், இரைப்பை
- நீர் – சிறுநீரகம்
- நெருப்பு – இதயம், சிறுகுடல்
- காற்று – நுரையீரல், பெருங்குடல்
- ஆகாயம் – கல்லீரல், பித்தப்பை
நுரையீரலின் இயக்கம் சரியாக இல்லையென்றால் வைரஸ் தொற்றிக் கொள்கிறது. இப்பொழுது ராஜ உறுப்புகளை நன்றாக இயக்கக்கூடிய முத்திரைகளை பயிற்சி செய்யப் போகிறோம். ஒவ்வொரு மூலகமும் மனிதனுடைய ராஜ உறுப்புகளை பாதுகாக்கிறது. ஆக, ஒவ்வொரு மூலகத்தைச் சார்ந்த முத்திரைகள் செய்யும்போது அந்த மூலகத்தைச் சார்ந்த மனிதனுடைய ராஜ உறுப்புகள் நல்ல நோய் எதிர்பாற்றல் பெற்று சிறப்பாக இயங்கக்கூடிய நிலையை அடைகின்றன. ஆகையால், நீங்கள் கீழ்க்காணும் முத்திரைகளை மகிழ்ச்சியாக பயிற்சி செய்யுங்கள்.
பிரித்வி முத்திரை:
- இதன் மூலகம் ‘நிலம்’.
- முதலில் நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை 20 வினாடி கவனிக்கவும்.
- இப்போது இரு கைகளிலும் மோதிர விரல் நுனியையும் பெருவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு 2 நிமிடம் கண்களை மூடி, இயல்பாக நடக்கக்கூடிய மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த முத்திரை செய்வதால், மண்ணீரலும் இரைப்பையும் நல்ல சக்தி ஓட்டம் பெற்று சிறப்பாக இயங்கும்.
வருண முத்திரை:
- இதன் மூலகம் ‘நீர்’.
- நாற்காலியில் நேராக அமரவும். முதுகெலும்பை நேராக வைத்துக் கொள்ளவும்.
- இயல்பாக நடக்கக்கூடிய மூச்சோட்டத்தை 10 வினாடி கூர்ந்து கவனிக்கவும்.
- இரு கைகளிலும் சுண்டுவிரல் நுனியை பெருவிரல் நுனியுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு கண்களை மூடி, இயல்பாக நடக்கக்கூடிய மூச்சோட்டத்தை 2 நிமிடம் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த முத்திரையால் சிறுநீரகம் மற்றும் கணையத்திற்கு சிறந்த சக்தி ஓட்டம் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பாற்றலும் பெற்று நன்றாக இயங்கும்.
சூன்ய முத்திரை:
- இதன் மூலகம் ‘நெருப்பு’.
- நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- இப்போது இயல்பாக நடக்கக்கூடிய மூச்சோட்டத்தை கவனிக்கவும்.
- பிறகு இரு கைகளிலும் நடுவிரலை மடக்கி, அதனுடைய மையத்தில் பெருவிரலை வைக்கவும்.
- இப்படி 2 நிமிடம் பயிற்சி செய்யவும்.
- இந்த முத்திரையால் இதயம், சிறுகுடல் மற்றும் இதய மேல் உறை ஆகியவை நன்றாக இயங்கும். நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கும்.
வாயு முத்திரை:
- இதன் மூலகம் ‘காற்று’.
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- இயல்பாக நடக்கக்கூடிய மூச்சோட்டத்தை 10 வினாடி கூர்ந்து கவனிக்கவும்.
- இப்போது இரு கைகளிலும் ஆள்காட்டி விரலை மடக்கி, அதன் மையத்தில் பெருவிரலை வைக்கவும்.
- இப்படி 2 நிமிடம் பயிற்சி செய்யவும்.
- இதனால் நுரையீரலும், பெருங்குடலும் நோய் எதிர்பாற்றல் பெற்று மிகச்சிறப்பாக இயங்கும்.
ஆகாய முத்திரை:
- இதன் மூலகம் ‘ஆகாயம்’.
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி, இயல்பாக நடக்கக்கூடிய மூச்சோட்டத்தை 20 வினாடி கூர்ந்து கவனிக்கவும்.
- இரு கைகளிலும் நடுவிரல் மற்றும் பெருவிரலின் நுனியை சேர்த்துக்கொள்ளவும்.
- இப்படி 2 நிமிடம் கண்களை மூடி இயல்பாக நடக்கக்கூடிய மூச்சோட்டத்தைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த முத்திரையால், கல்லீரலுக்கும் பித்தப்பைக்கும் சக்தி ஓட்டமும், நோய் எதிர்ப்பாற்றலும் கிடைத்து, அவை சிறப்பாக இயங்கும்.
மனிதர்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய ஆத்ம சக்தியை முதலில் உணர வேண்டும். நமது உடலானது ஐந்து அடுக்குகளால் ஆனது. அவை ‘அன்னமய கோசம்’, ‘பிராணமய கோசம்’, ‘மனோமய கோசம்’, ‘விஞ்ஞானமய கோசம்’, ‘ஆனந்தமய கோசம்’. இவற்றில் ‘ஆத்மா’ என்று சொல்லக்கூடிய அதிக அற்புத பிரபஞ்ச சக்தி வாய்ந்தது ‘ஆனந்தமய கோசம்’. நாம் செய்யும் இந்த முத்திரைகள் ஆனந்தமய கோசத்தில் இருந்து சக்தியைப் பெற்று மற்ற உறுப்புகளில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்கி, எதிர்ப்பாற்றலை கொடுக்கும். எந்தவொரு நோய்க் கிருமிகளும் நம்மைத் தாக்காமல் வாழ மருந்தானது நமது கைகளிலேயே இருக்கிறது. ‘வெறும் கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் வைரஸ் தாக்காமல் இருக்கக்கூடிய மூலதனம்’. எனவே நீங்களும் இந்த ஐந்து முத்திரைகளையும் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் பயிற்சி செய்யுங்கள். எந்தவொரு தொற்று கிருமிகளும் தாக்காதவாறு நலமுடன் வாழுங்கள்.