30
Aug
குழந்தைப் பருவத்திலேயே நோய்வாய்ப் படுவது ஏன்?
மனித உடல் இறைவன் அளித்த வரப்பிரசாதம். இந்த உடலை அக்கால மனிதர்கள் திடமாக வைத்து, நோயின்றி வளந்தார்கள். ஆனால், இன்று பிறக்கும் குழந்தைக்கே, பிறந்து ஒரு மாதத்தில் உடல் உள் உறுப்புகளில் பல பாதிப்பு. உடன் நுரையீரல் சரியாக இயங்கவில்லை என்று அறுவை சிகிச்சை, இருதயம் இயக்கம் சரியில்லை என்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரை பெரும்பான்மையான மனிதர்கள், மாத்திரை, மருந்து, ஊசி, பலவித சோதனை, ஸ்கேன் என்று தான் வாழ்க்கை செல்கிறது. ஏன் இந்த நிலைமை?
மனித உடல் எதனால் உருவானது?
நமது இந்த உடல், தந்தையின் விந்து, தாயின் உடலில் கருவாக பரிணமித்து வெளியே உடல் பெற்று வந்துள்ளது. தந்தையின் ஒட்டுமொத்த விந்துதான் உடலாக வந்துள்ளது! விந்தில், ரத்தத்தின் ஒட்டுமொத்த உயிர் ஆற்றல் உள்ளது. நாம் சாப்பிடும் ஒட்டுமொத்த உணவின் தொகுப்புதான் ரத்தமாக மாறுகிறது. அப்படி என்றால் மனித உடலில் பல மில்லியன் செல்கள் உள்ளன. அனைத்தும் உயிர் ஆற்றலுடன் இயங்க வேண்டுமெனில் ஒவ்வொரு செல்லிற்கும் மனித உடலில் உள்ள உயிர்த்துகள் ரத்தம் மூலம் பாய்ந்து கொண்டிருக்கும். அதாவது ஒரு சிறிய துளி விந்துவில் நாற்பது அவுன்ஸ் ரத்தத்தின் கலோரி சக்தி ஆற்றல் மறைந்துள்ளது.
அன்றைய மனிதர்கள் புலனடக்கம் உள்ளவர்களாக இருந்தனர். உடலில் உள்ள உயிர் ஆற்றலின் மகிமையை உணர்ந்து அதனை பாதுகாத்து, திருமணமாவதற்கு முன்பே தவறான வழியில் சிற்றின்பத்தில் வீணடிக்காமல், விந்து சக்தியை திருமணமானபின் மாதம் இருமுறை மட்டும் மனைவியுடன் கூடி, நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை நாட்டிற்கு அளித்தனர்.
இன்று எங்கு பார்த்தாலும் மனதை மயக்கும் மன்மத காட்சிகள் திரைப்படத்தில் முதலில் வந்தது. பின்பு தொலைக்காட்சி ரூபத்தில் எல்லா வீட்டிலும் வந்தது. இப்பொழுது ஒவ்வொருவர் கையிலும் செல்போனாக தவழ்கிறது.
எந்தக் காட்சியை இளம் வயதில் பார்க்கக் கூடாதோ அந்த ஆபாச காட்சியை பார்ப்பதால் காம இச்சை மனதில் அதிகமாகி திருமணத்திற்கு முன்பே சிற்றின்பத்தில் மூழ்கி சுய இன்பத்திலும் மூழ்கி தகாத உறவின் மூலம் தன் உடம்பில் உள்ள மதிப்புமிக்க வீரியத்தை இழந்து விடுகிறான் ஆண்மகன்.
திருமணம் நடக்கும் பொழுது அவனது உயிர் ஆற்றல், சக்தி இழந்து காணப்படுகிறது. பிறக்கின்ற குழந்தை தந்தையின் ஒட்டுமொத்த விந்துவின் வெளிப்பாடுதான். அதனால் உயிர்சக்தி குறைந்த விந்தாற்றலில் இருந்து உருவாகும் குழந்தையின் உடலும் உள்ளுறுப்புகள் யாவும் முழுமையான ஆரோக்கியம் உள்ளதாக அமையாது. இதனால்தான் இன்று சிறிய குழந்தைகளுக்கே பல வகையான நோய்கள் வருகின்றன. உடலின் உள் உறுப்புகள் மிக விரைவில் பாதிக்கப் படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த ஒரு உடலை பெற்று பூமிக்கு வந்த குழந்தை, வளர்ந்து வரும் பொழுது, தனது வாழ்வியல் முறையிலாவது இயற்கையோடு இணைந்து, பசித்தால் மட்டும் சாப்பிடுவது, நன்கு மென்று சாப்பிடுவது, செல்போன் பேசுவதைக் குறைப்பது, உடலுக்கு சரியாக ஒய்வு கொடுப்பது என்று அமைத்துக் கொண்டால், அதன் உடல் ஓரளவு ஆரோக்கியமாக இருக்கும்!
ஆனால் இன்றைய மனிதர்கள் இயற்கைக்கு புறம்பான வழியில் வாழ்வதால் மேலும் உடல் மிக விரைவிலேயே பாதிக்கப்படுகிறது. பல வகையான வியாதிகளுக்கு இன்றைய தலைமுறை மக்கள் சிக்கி தவிப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இதிலிருந்து மீள என்ன வழி?
யோகக்கலைதான் இதற்குரிய சரியான தீர்வு! யோகக்கலை மனிதர்களுக்கு மனோரீதியாக நல்ல எண்ணத்தை கொடுக்கும். உடல் ரீதியாக நல்லதொரு தீர்வாகும். இந்த அற்புத கலையினை எந்த வயதில் உள்ளவர்கள் பயின்றாலும் அவர்கள் உடலில் இயற்கை சக்தியும் பிராண சக்தியும் முழுமையாக பாய்ந்து புத்துணர்வைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். உடலையும் மனதையும் வலிமைப் படுத்தும்.
குறிப்பாக, இளம் வயதினர் யோகக்கலை பயின்றால், அவர்களுக்கு மனக்கட்டுப்பாடும் புலன் அடக்கமும் கிடைக்கும். ஆண்கள் தங்கள் உயிர் ஆற்றலை பக்குவமாக பயன்படுத்துவர். வீணடிக்க மாட்டார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு திருமணம் ஆனபின் நிச்சயமாக நல்ல வீரியமிக்க குழந்தைதான் பிறக்கும். ஆக, நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடியது யோகா! நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக நல்ல எண்ணத்துடன் வாழச் செய்வது யோகா!
நாம் மட்டுமல்ல, நம் சந்ததிகளும் உடல் வலிமையுடன் மனோ திடத்துடன் வீரியம் நிறைந்த மனிதர்களாகவும் வாழ, யோகக்கலை நிச்சயம் துணை புரியும். அந்த வகையில் ‘ஏக நவாசனம்‘ தினமும் செய்து வருவது மிகவும் முக்கியம்.
ஏக நவாசனம் செய்முறை:
- தரையில் நேராக படுக்கவும்.
- மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை தூக்கி நிறுத்தவும்.
- முதுகையும் தூக்கி, இரு கைகளை தரையில் ஊன்றி, மூச்சை அடக்கி பத்து வினாடி இருக்கவும்.
- பிறகு மெதுவாக காலை கீழ போடவும்.
- இதுபோல் இடது காலை மாற்றி செய்யவும்.
பலன்கள்:
- இரைப்பை புத்துணர்ச்சி பெரும்.
- பித்தப்பை பலம் பெரும்.
- பெண்களின் மலட்டுத்தன்மை நீக்கும்.
- குடல் சுத்தமாகும்.
- சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
- மார்பும் இதயமும் பாதுகாக்கப்படும்.
- நாளமில்லா சுரப்பிகள் நன்கு சுரக்கும்.
என்ன உணவு சாப்பிடுவது?
- இந்த ஆசனம் செய்து வருவதுடன், மாலை நேரத்தில் எதாவது பழச்சாறு ஒரு நாள் சாப்பிடுங்கள்.
- காய்கறி வேக வைத்து சூப் ஒரு நாள் சாப்பிடுங்கள்.
- ஒரு நாள் மாலையில், எள்ளுருண்டை சுண்டல் சாப்பிடுங்கள்.
- இரவு உணவாக கேழ்வரகு புட்டு செய்து சாப்பிடுங்கள்.
- ஒரு நாள் இரவு, குறைந்த அளவு சாதத்துடன் வெந்தய குழம்பு / சீரகக் குழம்பு சேர்த்து சாப்பிடுங்கள்.
- பேரிச்சை, சீமை அத்தி, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட உலர் பழங்களை சாப்பிடுங்கள்.
- இரவு படுக்க செல்லும் முன்பாக வாரம் ஒரு முறை திரிபலா சூரணம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
ஏக நவாசனத்துடன் மேலே சொன்ன உணவு முறைகளை மேற்கொண்டால், வாழ்வில் ஏகாந்தமாக வாழலாம். நல்ல எண்ணங்கள் வளரும். புலன் அடக்கம் கிடைக்கும். பாதுகாக்க வேண்டிய உயிர்சக்தியை பாதுகாத்து நல்ல திடகாத்திரமான குழந்தை பெறலாம். உங்கள் குழந்தைகளை இன்றே இந்த ஆசனத்தை பயிலச் சொல்லுங்கள். யோகாசனம் ஒன்று தான் வாழ்வில் புலன் அடக்கத்தையும் நற்பண்புகளையும் நமக்கு கொடுக்க வல்லது. இதை அட்வைஸாக வேண்டாம், ஒரு மருத்துவ ஆலோசனையாக ஏற்றுச் செய்யுங்கள்.