செய்முறை:
- முதலில் விரிப்பு விரித்து அதில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிடவும்.
- பின் சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து ஒன்றை ஒன்று அழுத்துமாறு வைக்கவும்.
- மற்ற மூன்று விரல்கள் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
- மூன்று விரல்களுக்கிடையே இடைவெளி இருக்க கூடாது.
- இரு கைகளிலும் செய்யவும்.
- பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை செய்யவும்.
பலன்கள்:
- நீரிழிவு நீங்கும்.
- உடலில் சூடு சமமாகும்.
- தோல் பளபளப்பாகும்.
- சதை பிடிப்பு நீங்கும்.
- முக பருக்கள் வராது.
- மனதில் அமைதி ஏற்படும்.
- கணையம் மிக சிறப்பாக இயங்கும்.