நலம் தரும் நாற்காலி யோகா – ஆண்மைக் கோளாறு, மலட்டுத்தன்மை, ரத்த அழுத்தம், முடி உதிர்தல் – 4 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!
நமது உடலில் வெளி உறுப்புக்களான கண், காது, மூக்கு தெரிகிறது. ஆனால், உடலுக்குள் என்னென்ன இயக்கம் நடைபெறுகிறது? என்னென்ன உறுப்புக்கள் உள்ளன என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? இந்த உடலில், ‘நாளமில்லா சுரப்பிகள்’ என்று உள்ளன. அவை நமது அனைத்து உள் உறுப்புகளும் நன்கு இயங்குவதற்காக ரத்தத்தில் நேரடியாக திரவத்தை சுரக்கின்றன. இப்படி சுரப்பதில் மாறுபாடு ஏற்பட்டால்…. அதாவது, அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ, உடல் உள் உறுப்புக்கள் பாதிக்கப்படும். அந்த வகையில், நமது மூளை செல்களுக்கு மிக அருகிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி & பீனியல் சுரப்பிகள் சுரக்கும் பணியை நன்றாக செய்வதற்காக, நாற்காலியில் அமர்ந்து செய்யும் வகையில் ஒரு எளிய பயிற்சியை செய்யப் பழகுவோம்.
பிட்யூட்டரி சுரப்பி சரியாக சுரக்கவில்லையெனில் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, முடி உதிர்தல், தோல் வியாதி, ஆண்மைக்கோளாறு, பெண்களின் பால் உறுப்பு குன்றுதல், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும். அதேபோல் பீனியல் சுரப்பி ஒழுங்காக சுரக்கவில்லையெனில் சிந்தனையில் தெளிவு இருக்காது, இந்த சுரப்பிகள் நன்றாக இயங்க, ‘பைரவ முத்திரை’ மற்றும் ‘ஆதி முத்திரை’ என நாம் இரு முத்திரைகள் செய்ய வேண்டும்.
பைரவ முத்திரை செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி, பத்து முறை மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- பின்னர் இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கவனிக்கவும்.
- பிறகு இடது உள்ளங்கையின் மீது வலது உள்ளங்கையை வைக்கவும் (மேலேயுள்ள படத்தைப் பார்க்கவும்).
- இப்போது சாதாரண மூச்சில் மூன்று நிமிடம் இருக்கவும்.
- பிறகு கைகளை மாற்றி வலதுகை கீழேயும், அதன் மீது இடது கையை வைத்து, 3 நிமிடம் இருக்கவும்.
ஆதி முத்திரை செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- மெதுவாக மூச்சை இழுத்து, மிகவும் மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- இப்படி 10 முறை செய்யவும்.
- பிறகு மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கவனிக்கவும்.
- பின்னர் இரு கட்டை விரலையும் உள்ளங்கையின் மத்தியில் வைத்து, மற்ற நான்கு விரல்களையும் நன்றாக மடித்து மூடவும் (படத்தைப் பார்க்கவும்).
- இதே நிலையில் சாதாரண மூச்சில் 3 நிமிடம் இருக்கவும்.
- பிறகு ஒரு நிமிடம் மட்டும் மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.
- அதன் பிறகு சாதாரணமாக கைகளை விடுவித்து அமரவும்.
இரண்டு முத்திரைகளால் என்ன பலன்?
ஆண்மைக் கோளாறு நீங்கும்
இந்த முத்திரை, நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் புத்துணர்வும் உயிர் சக்தியும் கொடுக்கிறது. உயிர் சக்தியை அதிகப்படுத்துகிறது. விந்து சக்தியை அதிகரித்து, வீரியத்துடன் வாழ வழிவகுக்கிறது.
பெண்களுக்கு உடல் சூட்டை தணித்து, அதிக வெள்ளைப்படுதலை தவிர்த்து மலட்டுத்தன்மையை நீக்கி, உற்சாகமாக வாழ வழிவகை செய்கிறது. திருமணமானவர்கள், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இந்த முத்திரையை (கணவன் – மனைவி இருவரும்) பயிற்சி செய்ய வேண்டும். இதனால் அவர்கள் குறைபாடுகள் நீங்கும். உயிர் சக்தி நன்றாக இயங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
ரத்த அழுத்தம் குணமாகும்
பலருக்கு இன்று ரத்த அழுத்தம் உள்ளது. குறிப்பாக, ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளது. அவர்கள் இந்த இரு முத்திரைகளையும் தினமும் மூன்று வேளை பயிற்சி செய்தால் 21 நாட்களில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். 48 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால், பூரண குணமடையலாம். ரத்த அழுத்தம் இல்லாதவர்கள் இந்த முத்திரைகளை பயின்றால், எவ்வளவு வயதானாலும் ரத்த அழுத்தம் வராமல் வாழலாம்.
முடி உதிர்தல்
முடி உதிரும் பிரச்சனை, உடல் உஷ்ணத்தினாலும், பிட்யூட்டரி / பீனியல் சுரப்பி சரியாக இயங்காததாலும் வருகிறது. இந்த இரண்டு முத்திரைகளை தொடர்ந்து பயிற்சி செய்தால், உடல் உஷ்ணம் சமன்படும். முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும்.
தினமும் நாற்காலியில் அமர்ந்து நாம் ஏதோ ஊர்க்கதை பேசி நேரத்தை வீணாக செலவு செய்கிறோம். இந்த நாற்காலியை உங்களுக்கு உடல் நலம் தரும் நாற்காலியாக மாற்ற முயற்சி செய்யுங்கள். தினமும் 15 நிமிடம் அதே நாற்காலியில் அமர்ந்து முத்திரையும் எளிய யோகப் பயிற்சிகளையும் செய்து, மாத்திரை சாப்பிடுவதைத் தவிருங்கள். இதனுடன் கீழ்க்காணும் உணவு முறைகளையும் கடைப்பிடியுங்கள்.
என்னென்ன உணவு சாப்பிடலாம்?
- தினமும் 2 அத்திப்பழம் சாப்பிடவும்.
- வாரம் ஒரு நாள் பூசணிக்காயை உணவில் சேர்க்கவும்.
- பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து தினம் 3 பழங்கள் சாப்பிடவும்.
- அகத்திக்கீரை/ முருங்கைக்கீரை / பப்பாளிபழம் / உலர்ந்த திராட்சை சாப்பிடவும்.
- சீரகத்தை தண்ணீரில் போட்டு சுட வைத்து, அந்த நீரை அருந்தி வரவும்.
- வாரம் ஒரு முறை 3 வில்வ இலைகளைச் சாப்பிடவும்.
- மணத்தக்காளிக் கீரை, கருப்பு திராட்சையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்.
குறிப்பு:
புத்திர பாக்கியம், ஆண்மைக்கோளாறு உள்ளவர்கள் ஆதி முத்திரையை ஒரு நாளில் 10 முறை (ஒவ்வொரு முறையும் வெறும் 2 நிமிடம்) பயிற்சி செய்யவும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பைரவ முத்திரையை ஒரு நாளில் 10 முறை 2 நிமிடம் பயிற்சி செய்யவும். உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் தொடர்ந்து இதனை பயிலுங்கள். மாற்றுத்திறனாளிகளும் நாற்காலியில் அமர்ந்து பயின்றால், நல்ல பலன் கிடைக்கும்!