உடலிற்கும் மனதிற்கும் இலவச மருந்து
நம் வாழ்வில் ஆன்மிகம் – 02
உடம்பிற்கோர் மருந்து நல்ல உழைப்பு (யோகாசனம்)
மனித உடல் 120 வயது வரை நன்கு உழைக்க வேண்டுமெனில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் யோகாசனம் என்ற மருந்தை உட்கொள்ளுங்கள்.
உள்ளத்திற்கோர் மருந்து நல்ல நினைப்பு
உள்ளம் அமைதியாக இருக்க வேண்டுமெனில் அதற்கு தியானம் தான் சிறந்த மருந்து. தியானம் செய்தால் உள்ளம் அமைதி பெறும்.
எப்படி தியானிப்பது
ஜீவனை சிந்தையில் நினைத்து நிற்றலே தியானம். இது சற்குரு சீரோ பிக்க்ஷுவின் பொன்மொழி. கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை சிந்தையில் நினைத்து தினமும் 10 நிமிடங்கள் தியானிக்கவும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடம் மூச்சில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் குழந்தைக்கு சொத்து
எளிமையான முத்திரை – யோகாசனங்கள் – தியானம் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். இதுவே உண்மையான சொத்தாகும்.
மாத்திரை வேண்டாம்
உங்கள் இல்ல அலமாரியில் காலை – மதியம் – மாலை மாத்திரைகளை வைத்து அழகு பார்க்க வேண்டாம். முறையாக முத்திரை – யோகா – தியானம் பயிலுங்கள். தினமும் பயிலுங்கள் நிச்சயமாக வாழ்க்கை வளமாக இருக்கும். இந்த இரு மருந்தும் நம்மிடமே உள்ளது. ஒவ்வொருவரும் யோகா – தியானம் – முத்திரையை முறையாக பழகி வளமாக வாழுங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji