உடல் மன சோர்வு நீக்கி உற்சாகம் அளிக்கும் பிருத்வி முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 020
மாத்திரை – முத்திரை
மாத்திரை சாப்பிட்டு பழகிய நாம் இனி முத்திரையே நமது மாத்திரையாக மாற்ற வேண்டும். ஆம் பஞ்சபூதமும் சமமாக இயங்க முத்திரையே நமக்கு மாத்திரையாகும்.
பிருத்வி முத்திரை
பிருத்வி முத்திரை நில மூலகம். இதன் செயல்முறை விளக்கம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மண்ணீரல் நன்கு இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.
உடல் எடை
மிகவும் உடல் மெலிவாக உள்ளவர்கள் பயிற்சி செய்தால் உடல் எடை சரியாகும்.
வாய்ப்புண்
வாய்ப்புண், குடல் வலி, புண் வராது.
மன அமைதி
மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
5 வது அடுக்கின் மகிமை
முத்திரைகள் செய்யும் பொழுது நமது 5 வது அடுக்கில் ஆனந்தமய கோசத்தினுள்ள அற்புத சக்தி நம் உடலில் ஒவ்வொரு செல்களிலும் சென்று புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
பிருத்வி முத்திரையை காலை – மதியம் – மாலை மூன்று வேளை பயின்று நலமாக வளமாக வாழுங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji