குண்டலினி யோகம் சிறக்க என்ன வழி
நம் வாழ்வில் ஆன்மிகம் – 06
மனித உடல்
மனித உடலில் உயிர் சக்தி மூலாதாரம் மையத்தில் உள்ளது. அதனை சகஸ்ராரம் தலை வரை முழுமையாக மேல்நோக்கி இயங்கச் செய்யும் அற்புத கலை தான் இது. இக்கலை பணத்தால் அடையதக்கத்தன்று.
குண்டலினி யோகத்திற்கு தேவை
நல்ல குரு – அவர் காட்டும் போதனைகள்
உடல் வசியம் – உடல் ஆடாமல் இரண்டு மணி நேரம் இருக்க வேண்டும்
பிராண வசியம் – மூச்சு ஒரே சீராக இயங்க வேண்டும். பிராணாயாமத்தை தக்க குருவிடம் பயில வேண்டும்
மனோ வசியம் – மனதில் தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. எண்ணங்கள் நல்ல எண்ணமாகவே இருக்க வேண்டும்
உணவு முறை – சாத்வீகமான சைவ உணவு மட்டும் பசித்தால் அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று செல்ல இடம் வேண்டும்
உடலில் ஓட்டங்கள்
உடலில் வெப்ப ஓட்டம், மூச்சோட்டம், இரத்த ஓட்டம் சீராக இயங்க வேண்டும். 72000 ம் நாடி நரம்புகளிலும் இந்த ஓட்டங்கள் சீராக இருக்க வேண்டும். அதற்கு யோகாசனங்கள், மூச்சு பயிற்சி முறையாக பயின்று தினம் பயிற்சி செய்ய வேண்டும்.
குண்டலினிக்காக தியானமா
தியானம் செய்வது நம் கடமை. குண்டலினி இயற்கையாக மனிதனுக்கு வாழ்வில் ஒழுக்கம் கைகூடி எண்ணம் – சொல் – செயல் புனிதமாகும் பொழுது தானாக உயிர் சக்தி மேலோங்கும். அப்படிபட்டவர்களை பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் குரல் கம்பீரமாக இருக்கும். அடக்கமாக, அமைதியான சொரூபமாக இருப்பார். பூர்வ ஜென்ம வாசனை, சாதனை, இறை குரு அருளால் கைகூடும். பொறுமை, குருபக்தி சாதனை அவசியம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji