இன்று நாட்டில் ஒரு இடத்தில் நூறு பேரை ஒன்றிணைத்தால், அவர்களில் 60 பேருக்கு நீரிழிவு இருக்கும். இதனை பெரும்பாலான மனிதர்கள் குறையாக நினைக்கவில்லை. ‘நீரிழிவு வந்தால் கடைசிவரை மாத்திரை சாப்பிட வேண்டும்’ என்று முடிவு செய்து விடுகின்றனர். ‘யோகாசனம்’ என்கிற ஒரு பலமிக்க ஆயுதம் நம்மிடம் இருக்கையில் என்ன கவலை நீரிழிவைப் பற்றி? எளிமையான யோகாசனங்களையும், ஒழுக்க பண்புகளையும் நாம் கற்று, வளர்த்து வந்தால், நீரிழிவை முழுமையாக குணப்படுத்தி விடுவது சுலபம்.
நீரிழிவு எதனால் வருகிறது?
- எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாமலிருப்பது
- பசிக்காமல் உணவு உண்பது
- உடலுக்கு சரியான ஓய்வு கொடுக்காமலிருப்பது
- இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பது
- மாமிச உணவுகளை அதிகமாக உண்பது
- நன்றாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக சாப்பிடுவது
- எண்ணெய் தேய்த்து குளிக்காமலிருப்பது
- அதிகமாக உடலுறவு கொள்வது
- குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது
மேற்கண்ட நடவடிக்கைகளை மாற்றுவது தான் ‘யோகக்கலை’! மனித உடலில் கணையத்தில் (பாங்கிரியாஸ்), ‘ஆல்பா செல்’, ‘பீட்டா செல்’ என இரண்டு செல்கள் உள்ளன. இதில் பீட்டா செல்லானது இன்சுலினை சுரக்கின்றது. எளிமையான யோகாசனங்களை தினமும் காலையில் நீங்கள் 10 நிமிடம் பயிற்சி செய்தாலே, கணையம் ஒழுங்காக இயங்கும். நமது பண்புகள் மாறும். நீரிழிவு இருந்தால் சரியாகும். அதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையையும் நிறுத்தி விடலாம். நம்பிக்கையை உங்கள் மீதும் யோகாசனத்தின் மீதும் வையுங்கள். கணையத்தை நன்றாக இயங்கச் செய்து, நீரிழிவை சரியாக்கும். அர்த்த சலபாசனம் செய்து வாருங்கள். நீரிழிவு பிரச்சனை நிச்சயம் குணமாகும்!
அர்த்த சலபாசனம் செய்முறை….
- விரிப்பில் குப்புறப் படுக்கவும்.
- இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும்.
- உள்ளங்கையை தரையில் படுமாறு வைத்து கைவிரல்களை தரையில் நன்றாக அமுக்கவும்.
- தாடை பகுதி தரையில் பட வேண்டும்.
- இப்போது வலது காலை நன்றாக மேலே உயர்த்தவும்.
- வலது கால் முட்டியில் இடது காலின் பாதத்தை வைத்து, ஸ்டாண்டை போல தாங்கிப் பிடித்துக் கொள்ளவும்.
- இதே நிலையில் சாதாரண மூச்சில் 15 விநாடி இருக்கவும்.
- பின்னர் மெதுவாக காலை கீழே இறக்கி வைக்கவும்.
- இதேபோல இடது காலை மாற்றி செய்யவும்.
- இப்படி ஒவ்வொரு காலிலும் இரண்டு முறை பயிற்சி செய்யவும்.
ஆசனத்தின் பலன்கள்…..
நீரிழிவு நீங்கும்
கணையம் நன்றாக இயங்கும். நீரிழிவிற்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைத்து விடலாம்! தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) பயிற்சி செய்தால், நிச்சயம் பலன் உண்டு.
மூட்டுவலி
மூட்டு சவ்வுகள் நன்றாக செயல்படும். மூட்டுவலி வராது. வலி இருந்தாலும், தொடர்ந்து பயிற்சி செய்யும்போது விரைவிலேயே சரியாகும்.
கால் நரம்புகள்
கால் நரம்புகள் பலம் பெறும். பாதங்களில் வலியோ, வீக்கமோ வராது.
வயிற்று சதை
அதிகப்படியான வயிற்று சதை குறையும். உடல் அழகாக இருக்கும். அதிக உடல் எடையையும் பக்கவிளைவின்றி சரிபடுத்தும்.
கைகள் பலம் பெறும்
இரு கைகளுக்கும், தோள் பட்டைக்கும் பிராண ஆற்றல் நன்றாகக் கிடைக்கும். இதனால் கைவலி, தோள்பட்டை வலி நீங்கும். கைகள் நன்றாக பலம் பெறும்.
இதயமும் நுரையீரலும்
குப்புறப் படுத்தபடி இந்த ஆசனம் செய்வதால், இதயமும், நுரையீரலும் நன்றாக அமுக்கப்படும். இதனால் நுரையீரலிலுள்ள அசுத்தக் காற்றானது வெளியேறும். நல்ல பிராண சக்தியும் உள்வாங்கப்பட்டு உடலுக்கு வலு கிடைக்கும். தவிர, இதயம் சம்பந்தமான எந்த பிரச்சனையும் எப்போதும் வராது.
அடி வயிற்றுச் சூடும், வெள்ளைப்படுதலும்
பெண்களுக்கு அடிவயிற்றில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் வெள்ளைப்படுதல் அதிகமாகும். உடலும் களைப்பாக இருக்கும். உடலுறவில் நாட்டமிருக்காது. இந்த ஆசனமானது அடி வயிற்றுச் சூட்டை சமன்படுத்துகிறது. அதனால் வெள்ளைப்படுதலும், மாதவிடாய் பிரச்சனையும் சரியாகும்.
உணவுமுறை எப்படி?
- நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்து வருவதுடன், வாழைப்பூ, பாகற்காய், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
- வாரம் ஒரு முறை நாவல்பழம் சாப்பிடலாம்.
- முதல் நாள் இரவு செப்புச் சொம்பில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தைப் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் பகல் நேரத்தில் வடிகட்டி, அந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வரலாம்.